சென்னை: பாலிவுட்டின் எனர்ஜெடிக் ஸ்டார், வித்தியாசமான ஃபேஷன் சென்ஸ், அதிரடி நடிப்பு என எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் ரன்வீர் சிங். ஆனால் இந்த முறை அவரது பெயர் பேசப்பட்டது புதிய படம் அல்லது ஸ்டைலுக்காக அல்ல... ஒரு சர்ச்சைக்காக. அதுவும் தென்னிந்திய ரசிகர்களின் மத உணர்வுகளைத் தொட்ட விவகாரத்தில். அந்த சர்ச்சை இறுதியில் அவரை கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவை இந்திய அளவில் வேற லெவலுக்கு எடுத்துச் சென்ற படங்களில் ஒன்று காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் வசூல் மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வக் கதாபாத்திரம் தொடர்பாக முகபாவனைகள் மற்றும் சைகைகள் மூலம் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் கன்னட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்."ஒரு நடிகரை விமர்சிக்கலாம்... ஆனால் மக்களின் நம்பிக்கையை கேலி செய்யக்கூடாது" என்று பலர் கொந்தளித்தனர். சர்ச்சை வெடித்ததும் ரன்வீர் சிங் சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பலர் திருப்தியடையவில்லை. சில இந்து அமைப்புகள், "இது சாதாரண சினிமா சர்ச்சை இல்லை; மத உணர்வுகளை புண்படுத்திய விஷயம்" என்று குற்றம்சாட்டின. அதன் பிறகு போலீஸ் புகார், சட்ட நடவடிக்கை என விவகாரம் தீவிரமானது. இந்த விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றது. அப்போது பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டு மன்னிப்பு கேட்கும் உறுதியை ரன்வீர் தரப்பு அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு ரன்வீர் சிங் சென்று வழிபட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பெரிய பாதுகாப்பு, பிரம்மாண்ட வரவேற்பு எதுவும் இல்லாமல், சாதாரண பக்தரை போல முககவசம் அணிந்து அமைதியாக கோயிலுக்கு வந்தாராம் ரன்வீர். முதலில் விநாயகர் சன்னதியில் வழிபட்ட அவர், பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்து சில நிமிடங்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இதன் புகைப்படங்கள் வெளியான பிறகே பலருக்கும் விஷயம் தெரியவந்தது. இப்போது இந்த சர்ச்சையால் பேசப்பட்டாலும், ரன்வீர் சிங் பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார்களில் ஒருவர். Band Baaja Baaraat மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே கவனம் பெற்றார். அதன்பிறகு Goliyon Ki Raasleela Ram-Leela, Bajirao Mastani, Padmaavat, Gully Boy, 83 போன்ற படங்கள் மூலம் வித்தியாசமான நடிகராக தன்னை நிரூபித்தார். ஒரு கதாபாத்திரத்திற்காக முழுவதும் மாறி நடிப்பவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அதே நேரத்தில் அவரது விசித்திரமான உடை அலங்காரம், திடீர் கருத்துகள், ஓவர் எனர்ஜி ஆகியவை அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும். இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் வருகிறது. "தவறு புரிந்ததும் மன்னிப்பு கேட்டது நல்லது" என சிலர் பாராட்ட, "முதலில் கவனமாக இருந்திருக்கலாம்" என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி... ஒரு சர்ச்சை, ஒரு வீடியோ, ஒரு எதிர்ப்பு... இறுதியில் பாலிவுட் ஸ்டாரை கோயிலுக்கு கொண்டு சென்றுவிட்டது!என்ன செய்தார் ரன்வீர் சிங்?
சமூக வலைதளத்தில் மன்னிப்பு
நீதிமன்றம் வரை சென்ற பிரச்சனை
சாதாரண பக்தரை போல வந்த பாலிவுட் ஸ்டார்
சினிமா ப்ரொமோஷனில் நடந்த மோசமான சம்பவம்.. ஆபாச போட்டோ! அதிரடியாக களம் இறங்கிய காந்தாரா பட நடிகை
ரன்வீர் சிங் யார்?
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?