சென்னை: கடந்த சில மாதங்களாக நடிகர் ரவி மோகனுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று கெனிஷா. ரவி மோகன் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோது, கெனிஷாவின் பெயரும் தொடர்ந்து இணையத்தில் டிரெண்டாகி வந்தது.
அதன்பிறகு திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு, "இந்த சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்" என அறிவித்த கெனிஷா, சமூக வலைதளங்களிலும் மிகவும் அமைதியாக இருந்தார். முன்பு போல பதிவுகள், வீடியோக்கள், நேரலைகள் என எதிலும் பெரிதாக காணப்படாததால், "கெனிஷா எங்கே போனார்?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி எழுந்து வந்தது. அந்த நிலையில் தற்போது ஷார்ஜா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரை மீண்டும் செய்திகளில் பேசப்படும் நபராக மாற்றியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த இந்தியப் பெண் ஆன்லெட் மெர்லின், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி கெனிஷா மற்றும் அருணா வீரராகவனுக்கு தலா 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.30 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் கெனிஷாவின் பெயர் மீண்டும் டிரெண்டாக தொடங்கியது. கடந்த சில மாதங்களாக அவர் பெரிதாக எந்த பொதுவான நிகழ்ச்சிகளிலும் காணப்படவில்லை. சமூக வலைதள செயல்பாடுகளும் குறைந்திருந்தன. இதனால், "கெனிஷா என்ன ஆனார்?", "ஏன் திடீரென அமைதியாகிவிட்டார்?", "ரவி மோகன் விவகாரத்திற்கு பிறகு அவர் பொதுவெளியில் இருந்து விலகிவிட்டாரா?" என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. கெனிஷா ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தாலும், நடிகர் ரவி மோகனுடன் அவரது பெயர் இணைத்து பேசப்பட்ட பிறகே பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். பாடகியாக பிரபலமான ஜெனிஷா ரவி மோகனின் தோழியாக சோசியல் இந்தியாவில் அதிகமாக பேசப்பட்டார். பிறகு இருவரும் இணைந்து பல இடங்களில் ஒன்றாக வளம் வந்தனர். ஆனால் கடந்த மாதத்தில் திடீரென தான் ரவி மோகனை விட்டு விலகப் போகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த சமயத்தில் வெளியான வீடியோக்கள், கருத்துகள் மற்றும் பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் அதிகமாக பேசப்பட்டதால், கெனிஷா உணர்ச்சிபூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் தன்னை பாதிப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் சமூக வலைதளங்களில் காணாமல் போய்விட்டார். தற்போது ஷார்ஜா நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர், "முழு உண்மை வெளிவர வேண்டும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்" என்று கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர், "கெனிஷா தனது தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் சொல்ல வேண்டும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருகாலத்தில் தினமும் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வந்த கெனிஷா, சமீபகாலமாக அமைதியை தேர்வு செய்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பெயர் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை வந்தாலே உடனடியாக பதிலளித்து வந்த அவர், இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து கெனிஷா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரவி மோகன் விவகாரத்திற்கு பிறகு அமைதியாக இருந்த கெனிஷா, தற்போது ஷார்ஜா நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்படும் நபராக மாறியுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்டம் என்ன? கெனிஷா விளக்கம் அளிப்பாரா? அல்லது தொடர்ந்து அமைதியாக இருப்பாரா? என்பதையே தற்போது அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.என்ன நடந்தது?
திடீரென மீண்டும் டிரெண்டான கெனிஷா
ரவி மோகன் விவகாரத்தால் கிடைத்த கவனம்
கண்கலங்க வைத்த ரவி மோகன் பேச்சு... பின்னால் நடந்த சீக்ரெட் மீட்டிங்! நடிகர் கார்த்தி சொன்னது என்ன? இப்போ நல்ல முடிவு
ரசிகர்கள் கருத்துகள்
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி
அமைதியை தேர்வு செய்த கெனிஷா
மீண்டும் பேசப்படும் பெயர்