மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு


  • சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமாரின் மறைவு தென்னிந்திய சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சிவதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    56 வயதில் காலமான சலீம் குமார்

    மிமிக்ரி கலைஞராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய சலீம் குமார், மலையாள சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர். நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார்.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலமாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தேசிய விருது வென்ற மகத்தான நடிகர்

    1997-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான சலீம் குமார், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    Advertisement

    'அச்சனுறங்காத வீடு' திரைப்படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், 'ஆதாமின்றே மகன் அபூ' திரைப்படத்திற்காக தேசிய விருது மற்றும் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.

    தமிழிலும் அவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனுஷ் நடித்த 'மரியான்', ஆரி நடித்த 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பரிச்சயமான முகமாக மாறினார்.

    நடிகை சிவதாவின் உருக்கமான பதிவு

    சலீம் குமாரின் மறைவால் மனமுடைந்த நடிகை சிவதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அந்த பதிவில், "அன்புள்ள சலீமேட்டா, அமைதியாக இளைப்பாறுங்கள். நீங்கள் எங்களுக்கு தந்த சிரிப்புகளுக்கும், அன்பிற்கும், அழகான நினைவுகளுக்கும் நன்றி. 'நெடுஞ்சாலை' திரைப்படத்தில் உங்களுடன் பணியாற்றிய தருணங்களை நான் எப்போதும் பொக்கிஷமாக நினைத்துக்கொள்வேன்.

    உங்கள் புன்னகை, உங்கள் கருணை, நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் காட்டிய பாசம் என் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள். உங்களை மிகவும் மிஸ் செய்வோம். ஓம் சாந்தி." என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

    நெடுஞ்சாலை நினைவுகள்

    தமிழில் வெளியான 'நெடுஞ்சாலை' திரைப்படத்தில் சலீம் குமார் மற்றும் சிவதா இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்தில் உருவான நட்பும், சலீம் குமாரின் எளிமையான குணமும் பலராலும் பாராட்டப்பட்டது.

    Advertisement

    அவரது மறைவுக்குப் பிறகு சிவதா பகிர்ந்துள்ள இந்த பதிவு, சலீம் குமார் சக நடிகர்களிடம் எவ்வளவு அன்பாக பழகியவர் என்பதையும், அவருடைய மனிதநேயத்தைப் பற்றியும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேச வைத்துள்ளது.

    Suman: அஜித் எனக்கு அண்ணன் தான்! வரலாறு ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. நெகிழ்ந்த நடிகர் சுமன்

    திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

    நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்த சலீம் குமாரின் மறைவு மலையாள சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ரசிகர்களை சிரிக்க வைத்த அவரது எண்ணற்ற கதாபாத்திரங்களும், சக கலைஞர்களின் மனதில் அவர் ஏற்படுத்திய அன்பும் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும் என திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    சலீம் குமாரின் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சிவதாவின் இந்த பதிவு பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது.

    English Summary

    The demise of veteran Malayalam actor Salim Kumar has left the South Indian film industry in mourning. Known for his exceptional performances in both comedy and character roles, Salim Kumar passed away at the age of 56, leaving behind a remarkable cinematic legacy spanning more than three decades.Beginning his career as a mimicry artist, Salim Kumar rose to become one of Malayalam cinema’s most beloved performers. Over the years, he showcased his versatility through hundreds of memorable roles, earning widespread acclaim from audiences and critics alike.His contribution to Indian cinema was recognized with several prestigious honors, including the National Award for Best Actor for his performance in Adaminte Makan Abu. He also received multiple Kerala State Film Awards and was celebrated for his ability to seamlessly transition between humor and intense emotional performances.