வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன்


  • சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், கதாசிரியராகவும், நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் செல்வராகவன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமா செய்திகளை விட சமூக வலைதளங்களில் பகிரும் வாழ்க்கை தத்துவ வீடியோக்கள் மற்றும் பதிவுகளால்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

    Advertisement

    ஒரு காலத்தில் 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற கல்ட் படங்களை கொடுத்த இயக்குநர், இன்று வாழ்க்கை அனுபவங்களை எளிமையான வார்த்தைகளில் பகிரும் மனிதராகவும் ரசிகர்களிடம் பார்க்கப்படுகிறார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    செல்வராகவன் வீடியோ

    அந்த வீடியோவில் செல்வராகவன் பேசியதாவது, "நம்ம வாழ்க்கையிலே ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா... அவங்க என்னை ஏன் புரிஞ்சுக்கல? அவங்க ஏன் நம்ம புரிஞ்சுக்காம நடந்துக்கிறாங்க? என்பதுதான். ஆனா ஒரு விஷயத்தை நாம புரிஞ்சு கொள்ளணும். ரெண்டு மனிதர்கள் ஒரே மாதிரியாக யோசிப்பதில்லை."

    "அப்படி இருக்கும்போது இன்னொருவர் எப்படி நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டும்? "நீங்க உங்களை அவங்க புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை இதை பண்ண போய் அது எங்கேயோ போய் தாறுமாறா நிக்கும்."

    Advertisement

    "யாரும் யாரையும் புரிந்துகொள்ள வேண்டியது இல்லை. முதலில் அந்த எண்ணத்தை கட் பண்ணி விட்டுட்டு நீங்க முதலில் உங்களை புரிஞ்சுக்கோங்க. அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது. நீங்க உங்கள புரிஞ்சு வாழ்க்கையை கொண்டு போய்கிட்டே இருங்க."

    "ஏன்னா உங்கள பத்தி இன்னொருவர் ஒரு அபிப்பிராயத்துக்கு வந்து விட்டாங்க என்றால், நீங்க என்னதான் தலைகீழா நின்று உருண்டு புரண்டாலும் அது மாறப்போறது இல்ல. அவங்க நினைக்கிறது தான் சரின்னு நினைக்க போறாங்க. யாருமே நான் அவங்கள நல்ல புரிஞ்சுகிட்டேன்னு ஒருத்தர மாற்றி ஒருத்தர் சொல்ல போறது இல்ல." அதனால நீங்க உங்களுக்கு புரிஞ்சுகிட்டு உங்க வாழ்க்கையை நோக்கி போங்க என்று நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.

    Advertisement

    செல்வராகவன் பேசிய இந்த வீடியோவை பலரும் வெறும் தத்துவமாக பார்க்கவில்லை. மாறாக, உறவுகளில் ஏமாற்றம் அடைந்தவர்கள், நட்பில் காயப்பட்டவர்கள், திருமண வாழ்க்கையில் மன உளைச்சல் சந்திப்பவர்கள், வேலை இடங்களில் மதிப்பு கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    "வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாரும் இந்த கேள்வியை கேட்போம். ஏன் என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று. அதற்கான பதிலை இரண்டு நிமிடத்தில் சொல்லிட்டார் செல்வா" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    செல்வராகவனின் வாழ்க்கை தத்துவம்

    ரசிகர்கள் இந்த வீடியோவை இன்னொரு காரணத்திற்காகவும் கவனித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் மிக அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக செல்வராகவன் பார்க்கப்படுகிறார். 'புதுப்பேட்டை' வெளியான போது அது தோல்வி என்று சொல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது.

    Advertisement
    அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்

    'ஆயிரத்தில் ஒருவன்' வெளியான போது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இன்று அதே படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

    ஒரு காலத்தில் புரியவில்லை என்று ஒதுக்கப்பட்ட பல படங்கள், இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுவது செல்வராகவனின் சினிமா பயணத்தில் நடந்த உண்மை. அதனால் தான் அவர் பேசும் வார்த்தைகள் பலருக்கு வெறும் தத்துவமாக இல்லாமல், வாழ்க்கையில் காயப்பட்டு அனுபவம் பெற்ற ஒருவரின் உண்மையான அனுபவமாக தோன்றுகிறது.

    Selvaraghavan : சுற்றி நடந்த துரோகம்.. இது கடவுளின் நியதி.. செல்வராகவன் திடீர் போஸ்ட்! விஷயம் இதுதானா?
    Advertisement

    இயக்குநர் மட்டுமல்ல நடிகரும்

    கடந்த சில ஆண்டுகளாக இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் செல்வராகவன் கவனம் ஈர்த்து வருகிறார். 'சாணிக்காயிதம்', 'பகாசுரன்', 'ராயன்' உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கும் அவர், திரைக்கு வெளியே வாழ்க்கை பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

    English Summary

    Selvaraghavan: Acclaimed filmmaker and actor Selvaraghavan has once again captured the attention of social media users with a thought-provoking video about life and human relationships. Known for sharing philosophical reflections alongside his film work, Selvaraghavan’s latest message has resonated deeply with fans.In the viral video, he speaks about one of the most painful experiences in life — expecting others to understand us completely. According to him, people often suffer because they keep asking why others fail to understand their emotions, intentions, and struggles. He explains that no two individuals think in exactly the same way, making it unrealistic to expect everyone to see life from our perspective.Selvaraghavan advises people to stop chasing validation and understanding from others. Instead, he encourages individuals to focus on understanding themselves and moving forward with confidence. He points out that once people form an opinion about someone, changing that perception becomes extremely difficult, no matter how hard one tries.The video has been widely shared by people dealing with emotional struggles, relationship issues, friendship conflicts, workplace disappointments, and personal setbacks. Many viewers have commented that his words reflect real-life experiences rather than mere philosophy.Fans have also connected his message to his own career journey. Several of his films, including Pudhupettai and Aayirathil Oruvan, were initially misunderstood or criticized before later earning cult status among audiences. Because of this, many believe his advice comes from personal experience and years of overcoming criticism.Apart from directing iconic films such as Kadhal Kondein, 7G Rainbow Colony, and Pudhupettai, Selvaraghavan has also gained recognition as an actor through projects like Saani Kaayidham and Raayan. His ability to connect personal experiences with universal life lessons continues to earn appreciation from fans across generations.