புருஷன் சரியில்லனா பெண் வெளியே போவா!... சீரியல் நடிகை ரிஹானாவின் கருத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள்


  • சென்னை: பட்டுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து சீரியல் நடிகை ரிஹானா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஒருபுறம் ரிஹானாவின் கருத்துக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில், மறுபுறம் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இதனால் "ரிஹானா சொன்னது சரியா? தவறா?" என்ற விவாதம் இணையம் முழுவதும் சூடுபிடித்துள்ளது.

    Advertisement

    பட்டுக்கோட்டையில் என்ன நடந்தது?

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சந்தேகித்து, தனது மனைவியை கணவர் ராஜா கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பின்னர் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ராஜா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    அந்த வீடியோவில் தனது குடும்ப வாழ்க்கை சீரழிந்துவிட்டதாகவும், பலமுறை எச்சரித்தும் மனைவி கேட்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அப்போது தன்னுடைய மகனிடம் நான் இல்லை என்றாலும் இந்த உலகத்தில் நீ நிம்மதியா வாழ்ந்திடுவியா என்று ராஜா கேட்க அதற்கு அந்த மகன் இப்படியெல்லாம் பேசாதப்பா எனக்கு பயமா இருக்கு என்று சொன்னது பார்ப்போரை பதற வைத்துவிட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    களத்தில் இறங்கிய ரிஹானா

    இந்த விவகாரம் குறித்து நடிகை ரிஹானா வெளியிட்ட வீடியோ தான் தற்போது புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "ஒரு காலத்தில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நான் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். திருமணம் செய்யாமல் ஒரு ஆணுடன் வாழ முடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது லிவிங் டுகெதரே நல்லதாக தோன்றுகிறது" என்று கூறியிருந்தார். இந்த கருத்தே இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

    பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம்

    ரிஹானா தனது வீடியோவில் மேலும், "பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்லலாம். ஆனால் திருமணம் செய்துவிட்டேன் என்பதற்காக ஒருவரை சொத்து போல நினைத்து வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    Advertisement
    கயல் சீரியல் சுபாஷினி இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான்! ரியாஸ் கான் வீட்டு பங்க்ஷனில்! நடிகை உருக்கம்

    அவரது இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "தவறு செய்தாலும் அடிக்க உரிமை கிடையாது" என்று ரிஹானா பேசிய மற்றொரு விஷயமும் கவனம் பெற்றுள்ளது. "ஒரு பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது வேறு விஷயம். அதற்காக அடிக்கவோ கொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது. உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல பெண்கள் அமைப்புகள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    கணவன் சரியில்லையென்றால்?

    மேலும் பேசிய ரிஹானா, "ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு வேறு உறவை தேடுகிறாள் என்றால், அதன் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை யாரும் கேட்பதில்லை. கணவன்-மனைவி உறவில் என்ன பிரச்சனை இருந்தது என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது" என்றும் கூறியிருந்தார்.

    "ஆண் வெளியில் செல்லும் போது அதை சாதாரணமாக பார்க்கிறார்கள். ஆனால் பெண் செய்தால் மட்டும் பெரிய குற்றமாக பார்க்கிறார்கள்" என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகளே சமூக வலைதளங்களில் அதிக எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

    ரவி மோகனை தனியாக விடாதீங்க! இது பலருக்கு பாடம்.. கண்கலங்க பேசிய சீரியல் நடிகை ரிஹானா
    Advertisement

    ரிஹானா பற்றிய விமர்சனம்

    ரிஹானாவின் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கான கருத்துகள் பதிவாகத் தொடங்கின.

    பலர், "திருமணத்தை மீறிய உறவை நியாயப்படுத்துவது தவறு", "ஒரு தவறை சுட்டிக்காட்டும்போது இன்னொரு தவறை சரி என்று சொல்ல முடியாது" என விமர்சித்து வருகின்றனர். "அவர் சொன்னது வன்முறைக்கு எதிரான கருத்து" என ஆதரவு, மறுபுறம் ரிஹானாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    "அவர் திருமணத்தை மீறிய உறவை ஆதரிக்கவில்லை", "வன்முறையை எதிர்த்துதான் பேசியிருக்கிறார்", "ஒரு பெண்ணை தாக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதைத்தான் அவர் கூறியுள்ளார்" என சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    English Summary

    A shocking incident from Pattukkottai has become the center of a heated online discussion after television actress Rihana shared her views on the matter through a video message.The incident involves a man named Raja, who allegedly attacked his wife after suspecting her of being involved in an extramarital relationship. A video reportedly released by Raja later went viral on social media, drawing widespread attention and concern across Tamil Nadu.Reacting to the incident, Rihana stated that such cases make her feel that live-in relationships may sometimes be preferable to marriages built on control and possessiveness. She argued that people should have the freedom to leave a relationship if it becomes unhealthy rather than resorting to violence.The actress also emphasized that no individual has the right to physically assault or kill another person, regardless of personal disagreements or allegations. According to her, violence can never be justified under any circumstances.However, some of her comments regarding relationships and marriage drew criticism from a section of social media users, who felt she was indirectly normalizing extramarital relationships. Others defended her, saying that her primary message was against domestic violence and not in support of infidelity.