முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்!


  • சென்னை: அரசியலில் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஒரு தாயின் பார்வையில் மகன் என்றால் எப்போதும் அதே பாசம் தான். தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் விஜய் குறித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் பேசிய சில வார்த்தைகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

    Advertisement

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷோபா சந்திரசேகர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும், மரங்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசியதோடு, தனது மகன் விஜய் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

    Advertisement

    மரம் என்பது வெறும் மரம் இல்லை

    ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஷோபா சந்திரசேகர், மரங்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசி இருந்தார்.

    "மண் மாதிரியே இருக்கிறே" என்று ஒருவரை திட்டுவது கூட தவறு. மண்ணும், மரமும் நம்மை வாழ வைக்கும் உயிர்கள். மரங்கள் எல்லாம் வானத்தை நோக்கி நிற்கும் கவிதைகள். அவற்றை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை" என்று அவர் உருக்கமாக பேசினார்.

    மேலும், "மனம் கஷ்டமாக இருக்கும் போது ஒரு மரத்தை கட்டிப்பிடித்துப் பாருங்கள். அது புதிய உற்சாகத்தை கொடுக்கும். அதை நான் என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்"‌ என்ற அவரது வார்த்தைகள் பலரது கவனத்தை ஈர்த்தது.

    Advertisement

    நடிகர் விவேக்கை நினைவு கூர்ந்த ஷோபா

    மரநடுகை குறித்து பேசும்போது மறைந்த நடிகர் விவேக்கையும் ஷோபா சந்திரசேகர் நினைவு கூர்ந்தார். "விவேக் இருந்திருந்தால் இன்னும் நிறைய மரங்களை நட்டிருப்பார். இன்னும் நிறைய விழிப்புணர்வை உருவாக்கியிருப்பார்" என்று அவர் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடிகர் விவேக் மேற்கொண்ட முயற்சிகளை பலரும் நினைவுகூரும் நேரத்தில், ஷோபாவின் இந்த கருத்தும் கவனம் பெற்றுள்ளது.

    விஜய் பற்றி அம்மா பேச்சு

    நிகழ்ச்சியின் இறுதியில் அவர் கூறிய ஒரு வரிதான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. "மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு இந்த மண்ணையும் மரங்களையும் காப்பாற்றும். இயற்கையை நேசிக்கும் நண்பன் தான் நமக்கு முதலமைச்சராக வந்துள்ளார்" என்று விஜய் குறித்து அவர் பேசினார்.

    Advertisement

    அரசியலில் விஜயின் செயல்பாடுகள் குறித்து தினமும் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், அவரது தாயார் கூறிய இந்த வார்த்தைகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    அரசியலில் விஜயின் புதிய முகம்

    நடிகராக இருந்த விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து மக்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் பிரசார நேரத்தில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அவர் முக்கியமாக பேசியிருந்தார். அரசியலில் புதிதாக இருந்தாலும், மக்களிடம் பேசும் பாணி மற்றும் இளைஞர்களின் ஆதரவு காரணமாக அவர் தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

    Advertisement

    சிறுவயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வம்?

    விஜய்யை நெருக்கமாக அறிந்தவர்கள் பலரும், சிறுவயதிலிருந்தே மரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கை சூழல் மீது அவருக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.

    திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இடையிலும் இயற்கை சூழலில் நேரம் செலவிட விரும்புவார் என்ற தகவல்களும் முன்பே வெளியாகியுள்ளன. அந்த அனுபவங்களின் அடிப்படையில்தான், "இயற்கையை நேசிக்கும் நண்பன்" என்று ஷோபா சந்திரசேகர் குறிப்பிட்டிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?

    தாய் சொன்ன ஒரு வரி

    விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலர் அவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த முறை பேசியது அவரது தாயார். அதனால் தான், "அரசியல்வாதி விஜய் பற்றி அல்ல... மகன் விஜய் பற்றி ஒரு தாய் பேசிய வார்த்தைகள்" என்று ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    அரசியலில் வெற்றி, தோல்வி, விமர்சனம், பாராட்டு என எது வந்தாலும், ஒரு தாயின் பார்வையில் மகன் எப்போதும் அதே மகன் தான் என்பதையும் ஷோபா சந்திரசேகரின் இந்த பேச்சு நினைவுபடுத்தியுள்ளது.

    English Summary

    Shoba Chandrasekhar : Shoba Chandrasekhar, mother of Tamil Nadu Chief Minister Vijay, has drawn attention on social media after sharing heartfelt thoughts about her son during a World Environment Day tree plantation event.Speaking at an environmental awareness program organized as part of a tree-planting initiative, Shoba emphasized the importance of protecting nature. She described trees as “poems reaching toward the sky” and urged people to respect both soil and forests, stating that nature is essential for human survival.She also shared a personal reflection, saying that hugging a tree during difficult times can bring comfort and renewed energy. Her emotional remarks about the healing power of nature resonated with many attendees.During her speech, Shoba remembered late actor Vivek, who was widely known for promoting environmental awareness and tree plantation drives. She noted that if Vivek were still alive, he would have continued inspiring more people to plant trees and protect the environment.However, the highlight of her speech was her comment about Chief Minister Vijay. Referring to him as a “friend of nature,” she expressed confidence that the current government would work to protect both the environment and the people.Her statement, “A nature-loving friend has come as our Chief Minister,” has since been widely shared online. Supporters have interpreted the remark as a reflection of Vijay’s long-standing interest in environmental issues and public welfare.