காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.. கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்


  • சென்னை: நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி. மேடைக் கச்சேரிகளில் தொடங்கிய இவர்களின் இசைப் பயணம், இன்று சினிமா, தொலைக்காட்சி, வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சர்ச்சை சம்பவத்தை குறித்து பாடகி ராஜலட்சுமி சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள், சந்தோஷங்கள், துயரங்கள், போராட்டங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் ராஜலட்சுமி. அந்த வரிசையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

    Advertisement

    பெரிய சர்ச்சை

    அந்த வீடியோவில் பேசிய ராஜலட்சுமி, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சர்ச்சையை பற்றி பேசி இருக்கிறார். ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியபோது, ஒரு கிராமிய பாடலை தனது தங்கை பாடியதாக கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதாகவும், அதுவே பின்னர் பெரிய சர்ச்சையாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

    "நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை. ஆனால் சிலர் நான் அப்படிச் சொன்னதாக பரப்ப ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு மதுரையில் இருந்து ஒருவர் தன்னை பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை தொடர்பு கொண்டார். நான் என்ன சொல்கிறேன் என்பதை கேட்காமல், 'நீங்கள் பொய் சொல்லி பிரபலமாவதற்காக இப்படிச் செய்திருக்கிறீர்கள். ஆதாரம் வாங்கியிருக்கிறேன். உங்களைப் பற்றி செய்தி வெளியிடப் போகிறேன்' என்று மிரட்டினார்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    என் தரப்பு நியாயத்தை யாரும் கேட்கவே இல்லை

    அந்த நபரிடம் எவ்வளவோ விளக்கம் அளித்தும் அவர் கேட்கவில்லை என்றும், அதற்குப் பிறகு சில தனியார் செய்தி சேனல்களிலும் தன்னை குற்றம்சாட்டும் வகையில் செய்திகள் வெளியானதாகவும் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    "அடுத்த நாள் காலையிலேயே சில தொலைக்காட்சிகளில் என்னைப் பற்றிய செய்திகள் ஓடின. நான் உடனே அந்த சேனல்களுக்கு போன் செய்து, என் தரப்பு விளக்கத்தை ஏன் கேட்கவில்லை என்று கேட்டேன். ஆனால் அவர்களும், 'எங்களிடம் ஆதாரம் இருக்கிறது' என்றே கூறினார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மனவேதனையில் இருந்தேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

    Advertisement

    கடைசி நேரத்தில் வந்த மர்ம அழைப்பு

    அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் தனது வாழ்க்கையில் கடவுளின் அற்புதம் என ராஜலட்சுமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    "அந்த நேரத்தில் திடீரென ஒருவர் எனக்கு போன் செய்தார். 'மேடம், நீங்கள் பேசியதாக சொன்ன அந்த நிகழ்ச்சியை நாங்கள் முழுவதுமாக வீடியோ எடுத்திருக்கிறோம். அதை யூடியூபில் போட்டு வைத்திருக்கிறோம் ஆனால் பெரிய அளவில் யாரும் பார்க்கப்படவில்லை. ஆனால் உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று அனுப்புகிறேன்' என்றார். அவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் அவர் கடவுள் போல வந்தார்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அந்த வீடியோவை பார்த்தபோது, நிகழ்ச்சியில் நடந்த அனைத்தும் முழுமையாக பதிவாகி இருந்ததாகவும், அதில் தான் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசவே இல்லை என்பது தெளிவாக தெரிய வந்ததாகவும் ராஜலட்சுமி தெரிவித்தார்.

    நான் இறந்து போயிட்டேனா? கணவரோடு சண்டையா? வதந்திக்கு நச்சென விளக்கம் கொடுத்த செந்தில்- ராஜலட்சுமி

    ஒரே வீடியோ மாற்றிய வாழ்க்கை

    அந்த வீடியோவை உடனடியாக தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன் பிறகு தன்னை குற்றம் சாட்டியவர்களே விளக்கம் கேட்க தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    "நான் உண்மையை நம்பினேன். கடவுளை நம்பினேன். அதற்கான பலன் அன்று மாலைக்குள் கிடைத்துவிட்டது. என்னை தவறாக சித்தரிக்க முயன்றவர்களுக்கு அந்த வீடியோவே பதில் சொல்லிவிட்டது" என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

    Advertisement

    கிராமத்து மேடையில் தொடங்கி உலக மேடைக்கு

    ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில் கணேஷின் வாழ்க்கை பலருக்கும் ஒரு உத்வேகக் கதையாக பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், கிராமிய இசைக் கலைஞர்களாக சிறிய மேடைகளில் பாடி வந்தவர்கள்.

    திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், ஊர் திருவிழாக்கள் என பல மேடைகளில் பாடி வந்த இந்த தம்பதியினர், பின்னர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

    சூப்பர் சிங்கர் மாற்றிய வாழ்க்கை

    குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் வெற்றிபெற்றது இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு "சின்ன மச்சான்", உ சொல்றியா ஊஊ சொல்றியா உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ் சினிமாவின் பிரபல கிராமிய குரல்களாக திகழ்ந்து வருகின்றனர்.

    ரசிகர்களை நெகிழ வைத்த ராஜலட்சுமி

    பொதுவாக எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஜலட்சுமி, தனது வாழ்க்கையில் சந்தித்த இந்த கசப்பான அனுபவத்தை கண்கலங்கும் வகையில் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    "உண்மை தாமதமாகலாம்... ஆனால் தோற்காது" என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ராஜலட்சுமி என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Singer Rajalakshmi, Senthil Ganesh, ராஜலட்சுமி, செந்தில் கணேஷ்