சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொரு பிரச்சனை தலைதூக்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய (Siragadikka Aasai serial june 12th episode) ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோடில், சத்யா - ரேகா காதல் விவகாரம் ஒருபுறம் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க, மறுபுறம் ரோகிணியின் வாழ்க்கை பெரிய திருப்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சத்யாவை போலீசார் விடுவித்த பிறகு வீட்டில் நடந்த சம்பவங்கள்தான் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சத்யாவும், ரேகாவும் காதலிப்பது பற்றி மீனா வீட்டில் கூறியவுடன், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் அந்த வீட்டில் ஒரே ஒரு நபர் மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தார். அது விஜயா. "சிந்தாமணி என்னை அவமானப்படுத்திய நாளே அவளோட குடும்பத்துக்கு சாபம் விட்டேன். அவளோட பொண்ணு ஏதாவது ஏழை வீட்டுப் பையனோட ஓடிப்போவான்னு சொன்னேன். இப்போ அதுதான் நடந்திருக்கு" என்று சந்தோஷத்தை மறைக்காமல் வெளிப்படுத்துகிறார் விஜயா. ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. எப்போதும் போல மீனாவின் குடும்பத்தை குறிவைத்து விஜயா பேச தொடங்கியதும், முத்து "பணக்கார வீட்டு சம்பந்தம் தேடி ஓடியது மீனா குடும்பம் மட்டும் இல்ல. பார்லர் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்ததும் நீங்கள்தான். ஸ்ருதி வீட்டுக்கு போய் அவமானப்பட்டதும் நீங்கள்தான்" என்று பழைய சம்பவங்களை எல்லாம் பட்டியலிட்டு விஜயாவையே மடக்கிப் பேசுகிறார். முத்துவின் வார்த்தைகளால் விஜயா சில நொடிகள் வாயடைத்து நிற்கும் காட்சிகள் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கியுள்ளது. சத்யா காதல் பிரச்சனை முடிந்ததாக நினைத்த நேரத்தில், கதை நேரடியாக ரோகிணி பக்கம் திரும்புகிறது. இரண்டு நாட்களாக சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ரோகிணியை பார்த்து அவருடைய அம்மாவும், மகனும் கவலையடைகிறார்கள். அவரை சந்திக்க வரும் வித்யாவிடம் ரோகிணி தனது மனவேதனையை கொட்டித் தீர்க்கிறார். "மனோஜ் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைக்கவே முடியல. அவனுக்காகத்தான் இவ்வளவு போராடுறேன். ஆனா இன்னைக்கும் அவன் அம்மா சொல்றதைதான் கேட்கிறான்" என்று கண்ணீருடன் பேசுகிறார். ரோகிணியின் நிலையை பார்த்த வித்யா, எதிர்பாராத ஒரு ஆலோசனையை கூறுகிறார். "இப்படி தினமும் அழுது கஷ்டப்படுறதுக்கு பதிலா பேசாம மனோஜுக்கு டைவர்ஸ் கொடுத்துடு. உன்னை உன் மாமியார் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. இந்த வழக்கு, கோர்ட், பிரச்சனை எல்லாம் உன் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கும்" என கூறுகிறார். ஆனால் அந்த வார்த்தைகள் ரோகிணியை இன்னும் உடைத்து விடுகின்றன. வித்யாவின் அட்வைஸை மறுக்கும் ரோகிணி, தனது காதலின் ஆழத்தை பற்றி சொல்கிறார். "என்னால மனோஜை விட்டுப் பிரிய முடியாது. அவன் இல்லாத வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது. என்ன நடந்தாலும் நான் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்" என்று உறுதியாக கூறுகிறார். ரோகிணியின் இந்த முடிவு அடுத்தடுத்த எபிசோடுகளில் பெரிய புயலை கிளப்பும் என ரசிகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர். சத்யா - ரேகா காதல் வெல்லுமா? ரோகிணி - மனோஜ் உறவு காப்பாற்றப்படுமா? ஒருபக்கம் சத்யா தனது காதலுக்காக குடும்பத்தையே எதிர்த்து நிற்கிறார். மறுபக்கம் ரோகிணி தனது திருமண வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறார். இரண்டு காதல்களும் இரண்டு விதமான போராட்டங்களை சந்திக்கும் நிலையில், அடுத்த எபிசோடுகளில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. காதலுக்காக சத்யா போராடுகிறாரா... வாழ்க்கைக்காக ரோகிணி போராடுகிறாரா... சிறகடிக்க ஆசை தற்போது உணர்ச்சிகளின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது!சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜயாவுக்கு முத்து பதிலடி
ரோகிணியின் வாழ்க்கையில் புதிய அதிர்ச்சி
விவாகரத்து கொடு
ரோகிணி சொன்ன வார்த்தை
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு!