சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு


  • சென்னை: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து வருகிறது. ஒருபுறம் மனோஜ் - ரோகிணி விவாகரத்து விவகாரம் தீவிரமடைய, மறுபுறம் ரேகாவை மீட்க முத்து போடும் தைரியமான திட்டம் கதையை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    ரோகிணியை சந்திக்க சென்ற மனோஜ், அவரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பேச ஆரம்பிக்கிறார். அப்போது ரோகிணி, "நாம் இருவரும் தனியாக ஒரு வீட்டில் சந்தோஷமாக வாழலாம்" என்று மீண்டும் உறவை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் மனோஜோ அதிரடியாக, "எனக்கு டைவர்ஸ் வேண்டும்" என்று நேரடியாக கூறிவிடுகிறார்.

    Advertisement

    இந்த வார்த்தையை கேட்ட ரோகிணி முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சில நிமிடங்களில் அமைதியாக ஒரு பெரிய கண்டிஷன் போடுகிறார்.

    "உன்னை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க நான் 5 லட்சம் ரூபாய் செலவழித்தேன். அந்த பணத்தை திருப்பிக் கொடு... உடனே டைவர்ஸ் தருகிறேன்!" என்று ரோகிணி சொன்னதும் மனோஜின் முகமே மாறிப்போகிறது.

    வீட்டுக்கு வந்ததும் அதிர்ச்சி

    ரோகிணியின் வீட்டிலிருந்து திரும்பிய மனோஜ், வீட்டில் தனியாக அமர்ந்து குழப்பத்துடன் யோசித்து கொண்டிருக்கிறார். அப்போது விஜயா வந்து என்ன நடந்தது என்று கேட்டபோது, ரோகிணி டைவர்ஸ் தர சம்மதித்திருப்பதாக கூறுகிறார்.

    அதை கேட்டதும் விஜயாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். ஆனால் அடுத்த நொடியே 5 லட்சம் ரூபாய் கண்டிஷனை மனோஜ் சொன்னதும் முகம் சுருங்கிவிடுகிறது.

    Advertisement

    அண்ணாமலையும் அதிரடியாக, "அந்த பணத்தை நீதான் கட்ட வேண்டும். இதிலிருந்து வெளியே வர வழி தேடு!" என்று கூறிவிடுகிறார். இதனால் மனோஜ் இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மனோஜ்க்கு மட்டும் பண பிரச்சனை தீரவே தீராது போல. என்ன பிரச்சனை வந்தாலும் கடைசியில் இப்படித்தான் பணத்தால் மனோஜ்க்கு செக் வருகிறது.

    சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?

    உயிரை பணயம் வைக்கும் முத்து

    மறுபுறம் ரேகா திருப்பதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சத்யா தகவல் தருகிறார். உடனே சத்யா வீட்டிற்கு செல்லும் முத்து, ரேகாவிடம் போனில் பேசுகிறார். அப்போது கண்ணீருடன் பேசும் ரேகா, "எப்படியாவது என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க..." என்று கதறுகிறார். ரேகாவின் குரலை கேட்ட முத்து, அவளை காப்பாற்ற எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயார் ஆகிறார்.

    Advertisement
    22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்?

    முத்துவின் மாஸ்டர் பிளான்

    ரேகாவிடம், "நீ மயக்கம் போட்டு விழுந்த மாதிரி நடி. அப்போதுதான் உன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து நாங்கள் உன்னை மீட்டுவிடலாம்" என்று பிளான் போட்டு குடிக்கிறார் அதற்கு ரேகாவும் சம்மதிக்கிறார்.

    பிறகு திட்டமிட்டபடி மயக்கம் போட்டு விழுந்தது போல நடிக்க, குடும்பத்தினர் அவளை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். களவாணி படத்தில் ஓவியா நடித்து ஹாஸ்பிடல் வந்தது போல தான் இந்த காட்சி இருக்கிறது. இதனால் முத்துவின் திட்டம் வெற்றி பெறப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    Advertisement

    சிந்தாமணி மட்டும் ஏமாறவில்லை

    ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சிந்தாமணியின் கணவருக்கு தெரியவர, அவர் உடனடியாக சிந்தாமணிக்கு தகவல் தருகிறார். ஆனால் சிந்தாமணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

    "இது முத்துவின் வேலைதான். அவன் ரேகாவை அங்கிருந்து தூக்க ஏதாவது பிளான் போட்டிருப்பான்" என்று உடனே சந்தேகப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ஆட்களை மருத்துவமனைக்கு அனுப்புமாறும் கூறுகிறார். இதை கேட்ட ரேகாவின் அப்பா நேரடியாக கிளம்ப முடிவு செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    முத்துவின் திட்டத்தை சிந்தாமணி முறியடிப்பாரா? ரேகா மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியுமா? ரோகிணி கேட்ட 5 லட்சத்தை மனோஜ் ஏற்பாடு செய்வாரா? என்ற கேள்விகளுக்கான பதிலை அறிய ரசிகர்கள் அடுத்த எபிசோடைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    English Summary

    The latest episode of Siragadikka Aasai delivered high-voltage drama as Rohini finally agreed to grant Manoj a divorce—but only if he repays the ₹5 lakh she allegedly spent to get him out of jail. While Manoj struggles to find a solution, his family is left shocked by the unexpected demand. Meanwhile, another major storyline unfolds as Muthu devises a risky rescue mission to save Rekha, who is reportedly being held under strict watch. Following Muthu's instructions, Rekha pretends to faint and is admitted to a hospital, creating an opportunity for her escape. However, Muthu's plan may not go smoothly, as Chinthamani quickly suspects foul play and sends people to monitor the hospital. With Manoj facing financial pressure, Rohini standing firm on her condition, and Muthu's rescue operation hanging by a thread, the serial has set the stage for several intense twists in the upcoming episodes. Fans are now eagerly waiting to see whether Rekha can escape safely and if Manoj can somehow arrange the money demanded by Rohini.