சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம்


  • சென்னை: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai serial june 2nd episode) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிந்தாமணியிடமிருந்து வீட்டை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போராடி வரும் முத்துவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக நேற்று ஒளிபரப்பான எபிசோட் ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று ஜுன் 3ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

    சிந்தாமணி வீட்டை ஏலத்தில் எடுக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்காக முத்து பல இடங்களில் அலைந்து திரிந்து பணத்தை ஏற்பாடு செய்து வந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் வைத்திருந்த பழைய கார்களை அடமானமாக வைத்து 38 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க பைனான்சியர் ஒருவர் சம்மதித்தார். இதனால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த முத்து சற்று நிம்மதி அடைந்தார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    Advertisement

    இன்றைய எபிசோடு

    முத்து பணத்தை ரெடி செய்த தகவல் எப்படியோ ரோகிணியின் காதுகளுக்கு சென்றுவிடுகிறது. மனோஜ் மூலம் கிடைத்த தகவலை ரோகிணி உடனடியாக சிந்தாமணியிடம் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி, "நான் மனோஜுடன் சேரும் வரை அந்த வீடு அவர்களுடைய கைக்கு போகக்கூடாது" எனவும் சொல்கிறார்.

    இந்த தகவலை கேட்டதும் அதிரடியாக களமிறங்கும் சிந்தாமணி, முத்துவின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக ஒரு திட்டம் தீட்டுகிறார். தனது ஆட்களை அழைத்து முத்து கொண்டு வரும் பணத்தை வழியிலேயே பிடிக்க ஃப்ளான் போடுகிறார்.

    முத்துக்கு கிடைத்த பணம்

    இதற்கிடையில் 38 லட்சம் ரூபாயை வீட்டுக்கு கொண்டு வரும் முத்து, அதை மீனாவிடம் கொடுத்து வைக்கிறார். ஆனால் அன்றிரவு மீனாவுக்கு ஒரு பயங்கரமான கனவு வருகிறது. தன்னிடம் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச் செல்வது போல் கனவு காணும் அவர், பதறி எழுந்து முத்துவிடம் தனது பயத்தை பகிர்ந்து கொள்கிறார்.

    Advertisement

    ஆனால் அந்த கனவு வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறுவது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுநாள் பணத்தை எடுத்துச் செல்லும் மீனாவை வழிமறிக்கும் மர்ம கும்பல், அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்கிறது.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மீனா, உடனடியாக முத்துவுக்கு தகவல் தெரிவிக்கிறார். மறுபுறம் முத்துவின் காரையும் தனியாக கண்காணிக்க சிந்தாமணி தனது ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

    முத்து ப்ளான்

    ஆனால் முத்து வழக்கம்போல் செயல்படாமல் புத்திசாலித்தனமாக அவர்களை ஏமாற்றிவிட்டு பைக்கில் கிளம்புகிறார். இதனால் சிந்தாமணியின் முதல் திட்டம் தோல்வியில் முடிகிறது.

    Advertisement

    இதையடுத்து நேராக பைனான்சியரை சந்திக்கும் முத்து, தனக்கு உடனடியாக பணம் தேவை எனக் கேட்கிறார். அப்போது புதிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. பணத்தை கொண்டு வந்தவர்கள் போலீசில் சிக்கிக் கொண்டதாக தகவல் வருகிறது. ஒருபுறம் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் எடுக்க தயாராக இருக்கும் நிலையில், மறுபுறம் பணம் போலீசிடம் சிக்கியதால் முத்து மீண்டும் நெருக்கடியில் சிக்குகிறார்.

    இனி முத்து பணத்தை மீட்டு வீட்டை காப்பாற்றுவாரா? சிந்தாமணியின் சதி வெற்றிபெறுமா? ரோகிணியின் துரோகம் வெளிச்சத்திற்கு வருமா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் அடுத்த எபிசோட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    English Summary

    Siragadikka Aasai serial Today : The latest episodes of Siragadikka Aasai have taken viewers on an emotional rollercoaster as Muthu continues his desperate fight to save his family home from Chinthamani.After weeks of struggle, Muthu finally manages to arrange ₹38 lakh by pledging his old cars through a financier. Believing that the money would help prevent the house from being auctioned, he returns home with renewed hope.However, trouble begins when Rohini learns about the money through Manoj and immediately informs Chinthamani. Determined to stop Muthu from reclaiming the house, Chinthamani allegedly sets a secret plan into motion by assigning her men to intercept the cash.Meanwhile, Muthu entrusts the money to Meena. During the night, Meena has a disturbing dream in which unknown men snatch the cash bag from her. What initially appears to be a nightmare soon turns into reality.The next day, a mysterious gang reportedly stops Meena and escapes with the money bag containing the ₹38 lakh. Shocked and devastated, she immediately informs Muthu about the incident.At the same time, Chinthamani’s men continue monitoring Muthu’s movements. But Muthu manages to outsmart them by changing his travel plans and leaving on a bike instead of following his usual route.As he rushes to meet the financier for help, another unexpected setback awaits. Information emerges that the individuals carrying the money may have been caught by the police, creating further complications.With Chinthamani moving closer to her goal, Rohini’s betrayal still hidden, and Muthu facing yet another financial crisis, the serial has entered one of its most suspenseful phases. Fans are now eagerly waiting to see whether Muthu can recover the money, save the house, and expose the conspiracy against him.