சென்னை: கடந்த சில வாரங்களாக சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களை அதிகமாக கோபப்பட வைத்த கதாபாத்திரம் என்றால் அது சிந்தாமணி தான். விஜயாவின் வீட்டை ஜப்தி செய்து, குடும்பத்தையே நடுத்தெருவில் நிற்க வைத்த சிந்தாமணி, கடைசிவரை அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்தார். இந்த நிலையில் இந்த (Siragadikka Aasai serial june 5th episode) சீரியலில் 26 ஜூன் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜய் கைப்பற்ற வேண்டும் என்று சிந்தாமணி எவ்வளவோ பிளான் செய்தார். ஆனால் விதி வேறு மாதிரி விளையாடியது. முத்துவின் போராட்டமும், மீனாவின் புத்திசாலித்தனமும் சேர்ந்து சிந்தாமணியின் கனவை ஒரே நாளில் சிதறடித்துவிட்டது. இன்றைய எபிசோடில் அதற்கு மேலாக ரசிகர்கள் ரசிக்கும் ஒரு சம்பவமும் நடந்துள்ளது. வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் இருந்த மீனா, சிந்தாமணியை நேருக்கு நேர் பார்த்து பேசும் காட்சி இன்றைய எபிசோடின் ஹைலைட்டாக அமைந்தது. "உன் புத்தி இப்படித்தான் போகும்னு எனக்கு முன்னாடியே தெரியும். எப்படியாவது பணத்தை திருடலாம்னு நீ நினைப்பேன்னு கடவுள் கூட கனவில் வந்து எச்சரிச்சிட்டாரு. அதனால நாங்க முன்கூட்டியே உஷாராகிட்டோம்" என மீனா சொன்னதும் சிந்தாமணியின் முகம் மாறிப்போகிறது. அதோடு நிற்காமல்... "இந்த வீடு இல்லாம போயிடும்னு நீ சொன்னியே... இப்ப பாரு, வீடும் எங்க கையிலதான் இருக்கு. இனிமேல் நீ என்ன பண்ணாலும் இந்த வீட்டுக்குள்ள ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. ஒழுங்கா கிளம்பு!" என மீனா கொடுத்த பதிலடி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கியுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவில் வக்கீல் கிருஷ்ணாவும் களத்தில் இறங்குகிறார். கோர்ட் கொடுத்த காலக்கெடுவுக்குள் முத்து பணத்தை கட்டிவிட்டதால், சட்டப்படி வீடு மீண்டும் விஜயா குடும்பத்துக்கே சொந்தம் என்று தெளிவாக அறிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல், பைனான்சியரிடம் இருந்த பத்திரம் உடனடியாக குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில், "ஒரு மணி நேரத்திற்குள் ஒரிஜினல் பத்திரம் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரிப்பதும் சிந்தாமணி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பல நாட்கள் கழித்து மீண்டும் சொந்த வீட்டுக்குள் நுழையும் விஜயா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுகிறார். ஒரு வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல; குடும்பத்தின் நினைவுகள் என்பதை அந்த காட்சி மீண்டும் நிரூபித்தது. அண்ணாமலை பேசும்போது, "நான் இல்லாத பிறகும் நீங்கள் எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்" என்று சொல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முத்து அளித்த பதில் இன்னும் உருக்கமாக இருந்தது. "இந்த வீடு எப்போதும் உங்க பெயரிலும் அம்மா பெயரிலும் தான் இருக்கும்" என்று அவர் உறுதி அளிக்கிறார். விஜயா ஒவ்வொரு தடவையும் இது என் வீடு என்று உரிமை கொண்டாடினாலும், இப்போ விஜயாவும் மனோஜும் சேர்ந்து சிந்தாமணியிடம் பணம் வாங்கி ஏமாந்த பிறகு அந்த வீட்டை இப்ப முத்துவும் மீனாவும் போராடி வங்கி விஜயாவுக்கே சமர்ப்பிப்பது தான் கடுப்பாக இருக்கிறது. வீட்டை மீட்ட சந்தோஷத்தில் முத்து வீட்டை பூக்களால் அலங்கரித்து உறவினர்களை அழைத்து சிறிய கொண்டாட்டம் நடத்துகிறார். வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, ஒரே ஒரு மனிதர் மட்டும் முகம் சுளித்தபடி இருக்கிறார். அவர் மனோஜ்! குடும்பம் மீண்டும் ஒன்றாக சேர்ந்திருப்பதும், அனைவரின் கவனமும் முத்து பக்கம் திரும்பியிருப்பதும் மனோஜை உள்ளுக்குள் எரிச்சலடையச் செய்கிறது. இன்றைய எபிசோடில் ரசிகர்களை சிரிக்க வைத்த மற்றொரு காட்சி மிஸ்ரா - ஸ்வேதா சம்பவம். ஸ்வேதாவிடம் மிஸ்ரா தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதை பார்த்த ஸ்ருதி, "ரவி பாரு... மிஸ்ரா ஸ்வேதாவுக்கு ரூட் விட்றாரு!" என்று கிண்டல் செய்கிறார். அதை பார்த்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில், கொண்டாட்டத்திற்கு அருண் வராதது மீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சீதாவிடம் அதுபற்றி கேட்க, அவர் ஏதோ முக்கியமான வேலை என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் இந்த ஒரு விஷயமே அடுத்த வார எபிசோடுகளுக்கான புதிய ட்விஸ்டாக மாறுமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. வீடு மீட்கப்பட்டுவிட்டது. சிந்தாமணி திட்டம் தோல்வியடைந்துவிட்டது. ஆனால் சீரியல் இங்கே முடியப்போவதில்லை. வீட்டை இழந்த கோபத்தில் சிந்தாமணி அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? மனோஜின் மனதில் ஓடும் திட்டம் என்ன? அருண் வராததற்கு பின்னால் ஏதாவது பெரிய ரகசியம் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அடுத்த எபிசோடுகளை ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
வக்கீல் கிருஷ்ணாவின் அதிரடி
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம்
கண்ணீரில் நனைந்த விஜயா
வீட்டில் கொண்டாட்டம்
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை
ஸ்வேதாவுக்கு ரூட் விடும் மிஸ்ரா
புதிய சந்தேகத்தை கிளப்பிய அருண்
அடுத்து என்ன?