சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து


  • சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் பல மாதங்களாக நீடித்து வந்த வீட்டுப் பிரச்சனைக்கு முடிவு கட்டி, சிந்தாமணியிடம் இருந்து வீட்டை மீட்ட முத்து - மீனா குடும்பம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த சில நிமிடங்களிலேயே, ரோகிணியை போனிலேயே கிழித்து எடுத்த விஜயாவின் ஆவேசம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க விஜயாவின் கோபம், மனோஜின் ஏக்கம், ரோகிணியின் அதிர்ச்சி என உணர்ச்சிகள் கலந்த பரபரப்பான திருப்பங்களோடு நகர்ந்தது.

    Advertisement

    வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் குடும்பம்

    சிந்தாமணியின் திட்டத்தை முறியடித்து, கடைசி நேரத்தில் பணத்தை ஏற்பாடு செய்து வீட்டை மீட்டுக் கொடுத்துள்ளார் முத்து. இதனால் வீட்டில் சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வீட்டிற்கு வர, வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பூஜை நடத்த வந்த பூசாரி, "வீட்டின் உரிமையாளர்கள் விஜயாவும் அண்ணாமலையும் முன்னாடி வந்து உட்காருங்க" என்று கூறுகிறார்.

    ஆனால் அண்ணாமலை அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தார். "இந்த வீடு மீண்டும் எங்களுக்கு கிடைச்சதுக்கு காரணம் நாங்க இல்ல... முத்துவும் மீனாவும் தான். அவங்கள்தான் பூஜையில உட்காரணும்" என்று கூற, முத்து - மீனா இருவரும் முன்னிலையில் அமர்ந்து பூஜை நடக்கிறது. இந்த காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜயா முகம் போன போக்கை பாத்துக்கணுமே.. அதேபோல மனோஜ் முத்துவும் மீனாவிற்கும் கொடுக்க முக்கியத்துவத்தை பார்த்து மனதிற்குள் புலம்பி கொண்டிருக்கிறார்

    Advertisement

    மனோஜ் வருத்தம்

    பூஜை முடிந்த பிறகு விஜயா, மனோஜை கவனிக்கிறார். வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தாலும் மனோஜ் மட்டும் ஏதோ கவலையோடு இருப்பதை பார்த்த விஜயா, "என்னடா முகமே சரியில்ல?" என்று கேட்கிறார்.

    அப்போது மனோஜ் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார். "இன்னைக்கு வந்தவங்க எல்லாரும் ஜோடியா இருந்தாங்க. முத்து - மீனா, ரவி - ஸ்ருதி, எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க. நான் மட்டும் தனியா இருந்தேன். எனக்கு எப்போ டைவர்ஸ் கிடைக்கும்? எப்போ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்று புலம்புகிறார்.

    அதோடு மட்டும் நிற்காமல், "நீங்க அன்னைக்கு ரோகிணியை திட்டினதாலதான் அவ கோபமா இருக்கா. நீங்க மன்னிப்பு கேட்டா தான் டைவர்ஸ் விஷயம் சீக்கிரம் முடியும்" என்று விஜயாவிடம் கூறுகிறார்.

    Advertisement

    விஜயா மன்னிப்பு கேட்க போகிறாரா?

    மனோஜின் பேச்சை கேட்ட விஜயா உடனே, "சரி... அவளுக்கு போன் போடு. நான் பேசுறேன்" என்கிறார். இதைக் கேட்ட ரசிகர்களுக்கே ஒரு நிமிடம் ஆச்சரியம். இத்தனை நாட்களாக ரோகிணியை திட்டிக் கொண்டிருந்த விஜயா, இப்போது மன்னிப்பு கேட்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. மனோஜும் மகிழ்ச்சியுடன் ரோகிணிக்கு போன் செய்கிறார்.

    போனை வாங்கிய ரோகிணியிடம் விஜயா, "நான் சொன்ன ஒரு வார்த்தையால நீ ரொம்ப உடைஞ்சு போயிட்டியாமே?" என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் ரோகிணியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. "ஆமா ஆண்ட்டி..." என்று மெதுவாக பதில் சொல்கிறார். அடுத்த நொடியே விஜயா மன்னிப்பு கேட்கப் போகிறார் என ரோகிணி நினைக்கிறார்.

    Advertisement

    ஆனால்... அதுக்கப்புறம் வந்தது மாஸ் ட்விஸ்ட்! சில வினாடிகள் அமைதியாக பேசிய விஜயா திடீரென தனது உண்மையான முகத்தை காட்டுகிறார்.

    "உன்னை நான் ஒரே ஒரு வார்த்தையில திட்டியிருக்கக் கூடாது..." என்று ஆரம்பிக்கிறார். இதைக் கேட்ட ரோகிணி மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அடுத்த வரியிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. "ஒரு வார்த்தையில இல்ல... இன்னும் நூறு வார்த்தையில திட்டியிருக்கணும்!" என்று ஆவேசமாக சொல்கிறார் விஜயா. இதைக் கேட்ட ரோகிணி ஷாக்காகிறார்.

    ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம்

    விஜயா கேட்ட கேள்வி

    அதன்பிறகு விஜயா நிற்கவே இல்லை. "என்ன திமிரு இருந்தா என்னை மன்னிப்பு கேட்க சொல்லுவ? நான் உன்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?" "என் பையனை ஏமாத்திட்டு இப்ப என்னையே மிரட்டுறியா?", "நீ ஒரு ஏமாத்துக்காரி!", "ஒன்னுமில்லாத வீட்டிலிருந்து வந்து என் குடும்பத்தையே சீரழிச்சிட்ட!" என்று சரமாரியாக வார்த்தைகளால் தாக்குகிறார்.

    Advertisement

    "செருப்பால அடிப்பேன்!" விஜயாவின் கோபம் உச்சத்தை எட்டியது அடுத்த சில நொடிகளில் தான். "நீ என் கையில கிடைச்சா செருப்பால அடிப்பேன்!", "உனக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா?", "எத்தனை பேரை கல்யாணம் பண்ணி ஏமாத்தின?", "நீ என் கால்ல இருக்குற செருப்புக்கு கூட சமம் கிடையாது!" என்று வெளுத்து வாங்குகிறார்.

    இறுதியாக, "இனிமே என் பையன் கடை பக்கம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது... வை போனை!" என்று கோபமாக போனை துண்டிக்கிறார்.

    சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட்

    அதிர்ச்சியில் உறைந்த ரோகிணி

    விஜயா மன்னிப்பு கேட்பார் என்று நினைத்த ரோகிணி, இப்படிப்பட்ட தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை. போன் கட் ஆன பிறகும் அதிர்ச்சியில் சில நொடிகள் பேச முடியாமல் நிற்கிறார். ஒருபுறம் அவமானம்... மறுபுறம் கோபம்... இரண்டுமே ரோகிணியை ஆட்டிப்படைக்கிறது.

    அடுத்த திட்டம் என்ன?

    ஏற்கனவே வீட்டை இழந்ததால் சிந்தாமணி கடும் கோபத்தில் இருக்கிறார். இப்போது விஜயாவிடம் இருந்து இப்படிப்பட்ட அவமானத்தையும் சந்தித்துள்ள ரோகிணி, இனி அமைதியாக இருப்பாரா என்பது பெரிய கேள்வியாகியுள்ளது. ரோகிணி மீண்டும் சிந்தாமணியுடன் கை கோர்த்து பழிவாங்க திட்டம் போடுவாரா? மனோஜை பயன்படுத்தி குடும்பத்தில் புதிய பிரச்சனையை கிளப்புவாரா? அல்லது வீட்டை மீட்ட மகிழ்ச்சியை சீரழிக்கும் புதிய சதி ஏதாவது உருவாகுமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடை காத்திருக்கிறார்கள்.

    ஒரு விஷயம் மட்டும் உறுதி... வீட்டை மீட்ட சந்தோஷத்தை விட, ரோகிணியை போனிலேயே விஜயா "வெளுத்து வாங்கிய" காட்சி தான் இன்றைய எபிசோடின் மிகப்பெரிய ஹைலைட்டாக மாறியுள்ளது!

    English Summary

    Siragadikka Aasai serial june 6th episode: The latest episode of Siragadikka Aasai delivered a powerful mix of emotions, family drama, and unexpected confrontations. After weeks of tension, Muthu and Meena finally succeeded in rescuing the family house from Chinthamani, bringing immense relief and happiness to the entire household.To celebrate the occasion, the family organized a special pooja at home. Relatives and friends gathered to mark the joyous moment. During the ceremony, the priest invited Vijaya and Annamalai, the official owners of the house, to sit in the front. However, Annamalai emotionally insisted that Muthu and Meena take their place, acknowledging that they were the true reason the family had regained their home.While the family celebrated, Manoj struggled with personal disappointment. Watching Muthu-Meena and Ravi-Shruthi enjoying their lives together reminded him of his own failed relationship. Feeling lonely, he opened up to Vijaya and expressed his frustration about his delayed divorce proceedings and hopes of starting a new life.Manoj then blamed Vijaya for creating tension with Rohini and suggested that the issue could be resolved if she apologized. Surprisingly, Vijaya agreed to speak with Rohini, creating the impression that she was finally ready to make peace.When Rohini answered the phone, Vijaya initially spoke calmly and mentioned that Rohini had been deeply hurt by a particular comment. Rohini immediately assumed an apology was coming and responded positively.However, the conversation quickly took a dramatic turn.