சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள், மறுபக்கம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என பிஸியாக இருக்கும் நிலையில், அவரை வைத்து இரண்டு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் பகிர்ந்துள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களால் தங்களது நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ராஜேஷ், "முதலில் எங்களுக்கு ஏற்பட்ட கடன் சுமார் 90 கோடி ரூபாய் தான். ஆனால் கொரோனா கால தாமதம், வட்டி சுமை, பட வெளியீட்டு பிரச்சனைகள் என பல காரணங்களால் அது தற்போது 120 கோடி ரூபாய் வரை உயர்ந்துவிட்டது" என்று வேதனையுடன் கூறியுள்ளார். ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய பல குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த இரண்டு படங்களின் நிதிச்சுமை இன்னும் தங்களை துரத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சிவகார்த்திகேயனுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாக ராஜேஷ் கூறியுள்ளார். "சிவகார்த்திகேயனுக்கும் சுமார் 55 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் போட்ட ஒப்பந்தப்படி அவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் பயணம் சாதாரணமானதல்ல. தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் நகைச்சுவை நடிகராகவும் அதன் பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார். மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, டாக்டர், டான் போன்ற படங்கள் அவரை முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக குடும்ப ரசிகர்களும், குழந்தைகளும் விரும்பும் நடிகராக உருவெடுத்தது சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், பின்னர் சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதிலும் ஹீரோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. பல ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு வெளியான அயலான் படமும் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்த இரண்டு படங்களின் பைனான்ஸ் தாக்கம் இன்னும் தயாரிப்பு தரப்பை பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் அவரின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. ஆனால் அதன்பின்னர் வெளியான சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதனால் தற்போது உருவாகி வரும் சேயோன் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சேயோன் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் அடுத்த முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக வெற்றியை தேடி வரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் தயாரிப்பாளர் 120 கோடி ரூபாய் கடன் குறித்து உருக்கமாக பேசியிருக்கும் நிலையில், மறுபுறம் தனது அடுத்த படங்களின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற அழுத்தமும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது உருவாகி வரும் சேயோன் படம், ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய படமாகவே பார்க்கப்படுகிறது.120 கோடியாக உயர்ந்த சுமை
சிவகார்த்திகேயனுக்கும் இழப்பா?
டிவியில் இருந்து திரையுலக உச்சிக்கு
வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம்
அமரன் மீண்டும் உயிர் கொடுத்ததா?
“CM விஜய்க்கு நான் போன் பண்ணி வாழ்த்து சொன்னேன்!”.. சிவகார்த்திகேயன் பேட்டி! பழைய சர்ச்சைகளுக்கு பதிலா?
சேயோன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கடனில் தவிக்கும் தயாரிப்பாளர்