சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரை பற்றிய நினைவுகள், சந்திப்புகள், உணர்வுபூர்வமான தருணங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி நடிகை கன்னிகா பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களின் மனதை உருக்கி வருகிறது.
பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு அவரை பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் அவரது சினிமா பயணம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் அவரது குடும்பம், கடைசி நாட்கள், நண்பர்களுடனான உறவுகள் போன்ற விஷயங்களும் விவாதமாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பாரதிராஜாவை கடைசியாக சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்து கன்னிகா சமீபத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், உடல்நலக்குறைவால் மிகவும் சோர்வாக இருந்த பாரதிராஜாவை சினேகனும் கன்னிகாவும் நேரில் சந்திக்கிறார்கள். அப்போது கன்னிகா, "உங்களுடைய நடிப்பை பார்த்து நாங்கள் இன்னும் வியந்து போகிறோம்" என்று பாராட்டியபோது, உடல் வலி இருந்தபோதும் பாரதிராஜா சிரித்தபடி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சரியாக எழுந்து உட்கார முடியாத நிலையிலும், அருகில் வந்தவர்களை அன்போடு வரவேற்று பேசிய அந்த காட்சிகள் பலரது கண்களையும் கலங்க வைத்திருந்தன. "அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து விடுவார் என்று நினைக்கவே இல்லை" என்று கன்னிகா அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது பாரதிராஜா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சினேகன் தனது மனைவி கன்னிகாவையும், இரு குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் சமாதி முன்பு குடும்பத்துடன் நின்று மரியாதை செலுத்திய சினேகன், தனது குழந்தைகளுக்கு அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன்போது நடந்த ஒரு செயல் தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படுகிறது. பாரதிராஜா அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்த சினேகன், அதை தனது குழந்தைகளின் நெற்றியில் பொட்டாக வைத்தார். அந்த காட்சியில், குழந்தைகள் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் நின்றாலும், சினேகனின் முகத்தில் தெரிந்த மரியாதையும், நன்றியுணர்வும் பலரது மனதையும் தொட்ந்துள்ளது. "இது சாதாரண மண் அல்ல... தமிழ் சினிமாவை மாற்றிய மனிதரின் நினைவுகள் கலந்த மண்" என்ற உணர்வில்தான் சினேகன் அந்த செயலை செய்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினேகன் பல மேடைகளில் பாரதிராஜா மீது தனக்கு இருந்த மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். திரைப்பட உலகில் பலருக்கும் வழிகாட்டியாக இருந்த பாரதிராஜா, சினேகனுக்கும் ஒரு குருவாகவும், குடும்ப மூத்தவராகவும் இருந்ததாக நெருங்கியவர்கள் கூறுகின்றனர். அதனால்தான் அவரது மறைவுக்குப் பிறகும் குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்திய சினேகனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. "பாரதிராஜாவுக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதை இதுதான்", "ஒரு தலைமுறையை உருவாக்கிய மனிதருக்கு ஒரு சீடன் செலுத்திய அஞ்சலி", "குழந்தைகளுக்கு வரலாற்றை அறிமுகப்படுத்திய அழகான தருணம்" என பலரும் இந்த காட்சிகளை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். பாரதிராஜா இன்று உடலால் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய திரைப்படங்களும், அவர் விதைத்த கலை மரபும் இன்னும் பல தலைமுறைகளை வழிநடத்திக் கொண்டே இருக்கும். அதற்கு சாட்சியாக, அவரது சமாதி முன் நின்று இரண்டு சிறு குழந்தைகளின் நெற்றியில் மண்ணை வைத்து ஆசீர்வதித்த சினேகனின் அந்த தருணம், ஒரு சாதாரண அஞ்சலி அல்ல... ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் மரியாதையின் அடையாளமாகவே பலரால் பார்க்கப்படுகிறது.எழுந்து உட்கார முடியாத நிலை
நெகிழ்ச்சி தருணம்
நெற்றியில் பொட்டு
பாரதிராஜாவுடன் சினேகனின் பாச பிணைப்பு
சமூக வலைதளங்களில் வைரல்
மறைந்தும் மறையாத பாரதிராஜா