சென்னை: "என்னுடைய முதல் காதல் பற்றிப் பேச வேண்டும் என்றால், இப்போது எதையும் வெளிப்படையாகப் பேச முடியாது. அதை சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துவிடும். முதல் காதலைச் சொல்லாமலே பல ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும்தான் இருக்கும். இந்த ரகசியம் எனக்கும், சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே நன்றாகத் தெரியும்" என்று நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை தந்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
திரைப்படை விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசும்போது, "நடிகை வனிதா விஜயகுமார் தனது மீதான கவனத்தைத் திருப்புவதற்காக, இல்லாத ஒரு விஷயத்தைப் பேசி அதனை விவாதப் பொருளாக மாற்ற முயலுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. அது ஒரு நல்ல நாகரிகமான விஷயம் கிடையாது.
சமீபத்தில் வனிதா விஜயகுமார் அளித்த ஒரு நேர்காணலில், தனது முதல் காதலைப் பற்றித் தான் சொன்னால் இந்தத் தமிழ்நாடே அதிர்ந்து போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிச் சொன்ன உடனேயே, சமூக ஊடகங்களில் ஒரு தரப்பினர் வனிதாவின் முதல் திரைப்படம் எது, அதன் கதாநாயகன் யார், அவர் யாரைக் குறிப்பிட வருகிறார் என்று யூகங்களின் அடிப்படையில் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வனிதா விஜயகுமார் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் 1995-ல் வெளியான 'சந்திரலேகா' ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஜய். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது, ஆனால் படமும் சுமாராகவே ஓடியது. இதற்கும் அவரது முதல் காதலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இப்போது விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், இன்றைய சூழலில் எல்லாம் மிகச் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தன் மீது பப்ளிசிட்டி சேர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே வனிதா விஜயகுமார் இதனைப் பேசுகிறார். தன் மீதான கவன ஈர்ப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதை அவர் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். இதற்கு முன்னரும், வனிதா இயக்கி நடித்த ஒரு படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இளையராஜா வீட்டிற்கு மருமகளாகப் போக வேண்டியவள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்புவதற்காகச் செய்யப்பட்ட ஒரு முயற்சிதான். அதேபோல், வனிதாவின் மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த சமயத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தாக்கிவிட்டதாகக் கூறி ஒரு விளம்பரத்தைத் தேடிக்கொண்டார். இப்போது தனது முதல் காதல் என்று கூறி, அந்த நபர் யார் என்ற விபரங்களை மறைப்பதற்கும் முக்கியக் காரணம், தற்போதைய முதலமைச்சர் விஜய் மீது ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடுவதுதான். நடிகர் விஜயகுமார் ஒருமுறை நேர்காணலில், தனது பிள்ளைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய போது, வனிதாவின் பெயரை மட்டும் சொல்லவில்லை. அதற்கும் வனிதா, தனது தந்தை வேண்டும் என்றே தன் பெயரை விட்டுவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, வனிதா விஜயகுமார் இப்போது கிளப்பியுள்ள இந்த முதல் காதல் சர்ச்சையில், அவர் மறைமுகமாகக் குறிப்பிடும் நபரின் பெயரை நேரடியாகச் சொன்னால் கூட, இன்றைய சூழலில் மக்கள் அதனை அப்படியே புறந்தள்ளி விடுவார்கள். முதலமைச்சர் விஜய் மீது திட்டமிட்டு ஒரு எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு விளம்பரத்தைத் தேட வனிதா முயல்கிறார் என்பது அப்பட்டமான உண்மை. இத்தகைய விளம்பர உத்திகள் தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.வனிதா விஜயகுமார் நேர்காணல்
பப்ளிசிட்டி - கவன ஈர்ப்பு
வனிதா விஜயகுமாரின் முதல் காதல்
புறந்தள்ளுவார்கள் மக்கள்