பிரத்யூஷா பியூட்டி பார்லரிலிருந்து காரில் சென்ற ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன? பரபரக்க வைத்த வழக்கு


  • சென்னை: தமிழில் விஜயகாந்தின் தவசி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை பிரத்யுஷா கடந்த 2002ம் ஆண்டில் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். 24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகை பிரத்யுஷாவின் காதலன் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, பிரத்யூக்‌ஷா யார்? எப்படி மரணமடைந்தார்? என்பது குறித்தெல்லாம் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் தந்த பேட்டியை பார்ப்போம்.

    Advertisement

    MEDIA CIRCLE என்ற யூடியூப் சேனல் பேட்டியில் பேசிய பாலாஜி பிரபு, "பள்ளிப் பருவத்திலிருந்தே பிரத்யூஷாவும் ஹைதராபாத்தின் பெரும் கோடீஸ்வர, அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்து இளைஞரான சித்தார்த் ரெட்டியும் காதலித்து வந்தனர்; இவர்களது அந்தஸ்து வேறுபாட்டால் பிரத்யூஷாவின் அம்மா சரோஜினி இக்காதலை முதலில் எதிர்த்தாலும், பிறகு தற்காலிகமாக சம்மதித்தார்,

    Advertisement

    நடிகை பிரதியூஷா

    ஆனால் சித்தார்த் குடும்பத்தினர் ஒரு நடிகையை திருமணம் செய்யக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், 2002 பிப்ரவரி 23 அன்று பியூட்டி பார்லர் சென்ற பிரத்யூஷாவை, அடுத்த நாள் கன்னட படப்பிடிப்புக்காக பெங்களூரு செல்லவிருந்த நிலையில், சித்தார்த் ரெட்டி ஒரு மணி நேரம் மட்டும் அவுட்டிங் வரலாம் என்று வற்புறுத்திக் காரில் அழைத்துச் சென்றுள்ளார்,

    ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்தி, நடிப்பை விடும்படி வற்புறுத்தி வாக்குவாதம் செய்த சித்தார்த், ஒருகட்டத்தில் நாம் இருவரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு கோக்கில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

    Advertisement

    பிரத்யூஷா அதனை நம்பிக் குடித்துக் காரிலேயே மயங்கி விட்டார்.. ஆனால், மரண பயத்தில் தான் குடிக்காமல் அவசர அவசரமாக கேர் மருத்துவமனையில் பிரத்யூஷாவை அனுமதித்து தற்கொலை நாடகமாடினார் சித்தார்த்.. ஒரு வாய் மட்டும் விஷம் குடித்ததால் எளிதாகப் பிழைத்துக்கொண்டார்.

    விஷம் குடித்து மரணம்

    ஆனால் அடுத்த நாள் காலை பிரத்யூஷா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிணவறையில் தன் மகளின் உடலைப் பார்த்த அம்மா சரோஜினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

    பிரத்யூஷாவின் கழுத்து, நெஞ்சு, தொடைப் பகுதிகளில் நகக்கீரல்களும் ரத்தக் காயங்களும், உடலில் விந்துவின் கறைகளும் இருந்தன.. மேலும் கழுத்து நெரிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிரத்யூஷா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. ஆனாலும், சித்தார்த்தின் குடும்பத்தினர் பண பலத்தால் அந்த உண்மையைக் கண்டறிந்த டாக்டரையே சஸ்பெண்ட் செய்ய வைத்தனர்.

    Advertisement

    உடம்பெல்லாம் நகக்கீறல் - வாயில் விஷம்

    ஆனால், சித்தார்த் ரெட்டியின் காரில் அவரது நண்பர்கள் 4 பேர் ஏறி, பிரத்யூஷாவைத் தங்களது பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர் என்பதுதான் அந்த தாயின் உறுதியான மாற்று வாதம்.

    தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கிடைத்த 2 ஆண்டு தண்டனையை முடித்துவிட்டுச் சித்தார்த் ரெட்டி தற்போது அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், 24 வருடங்களாகத் தனியாக நின்று போராடிய அந்தத் தாய், இது தற்கொலை அல்ல, கொலை என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்" என்றெல்லாம் தெரிவித்தார்.

    English Summary

    What Happened in the One Hour After Prathyusha Left the Beauty Parlour? The Case That Shocked Many