திருவனந்தபுரம்: கேரளாவில் ஆசை ஆசையாக மிக்சர் சாப்பிட்டபோது தொண்டையில் நிலக்கடலை சிக்கியதில் துடிதுடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னும்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனீர். திருமணமாகி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். மகன் பெயர் முகமது ரிஜான். வயது 3 ஆகும். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் முகமது ரிஜான் வீட்டில் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது தொண்டையில் நிலக்கடலை சிக்கி கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் முகமது ரிஜான் துடித்தான். இதையடுத்து குடும்பத்தினர் அவரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் முகமது ரிஜான் இறந்துவிட்டான்.Advertisement