சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதற்கிடையில் சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வெயிலுக்கு நடுவே வந்த இந்த திடீர் மழை மக்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.
Advertisement
மழை குறித்து ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்று மதியம் வெளியான இந்த அறிவிப்பில், "சென்னையில் இன்று (17-07-2026) மற்றும் நாளை (18-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Advertisement
மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.