சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 25 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement