மஸ்கட்டில் கவிதை நூல் அறிமுக விழா
மஸ்கட்: கவிஞர் மஸ்கட் மு. பஷீர் எழுதிய 'கோடங்கி' மற்றும் 'நட்சத்திரச் சிதறல்கள்' என்ற இரு கவிதை நூல்கள் அறிமுக விழா மஸ்கட் அஞ்சப்பர் உணவக அரங்கில் ஆகஸ்ட் 18ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸுபைர் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. பத்ரிநாத் மற்றும் மஸ்கட் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் திரு. சந்திரமோகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
திரு.பத்ரிநாத் அவர்கள் நூல்களின் பிரதிகளை வெளியிட்டு மதிப்புரையாற்றினார். திரு. சந்திரமோகன் அவர்கள் நூல்களைப் பெற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
திரு. ராஜாராம், திரு.வெங்கடரமணி, திரு.சிவராஜ்குமார், திருமதி. சுவர்ணா, திருமதி.கோகிலவாணி, திருமதி.ஜெயஸ்ரீ, திருமதி.சாவித்ரி ஆகியோர் மதிப்புரையாற்றினர்.
நூல் ஆசிரியர் மஸ்கட் மு. பஷீர் ஏற்புரையாற்றினார். முன்னதாக திரு.சுந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்த, திரு.சபரிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.