முகத்தில் தெளித்த சாரல்...
மவுனத்தைக் கலைப்பதைக் தவிர
ஐம்புலன்களும் பின்னிப் பினைந்தவை .
ஒரு புலனைத் தீவிரப்படுத்தி திசை திருப்பும் போது
இன்னொரு புலன் மங்கி வருகிறது.
விரும்பாத ஒன்று விழுகிற போது
ஒரு புலனை ஆக்கிரமித்து
மற்ற புலன்களை மந்தமாக்குவது இயல்பு-
அதனால்தான்
கண்கள் தடையாயிருக்கக்கூடாதே என்று
இமைகளை மூடி இசையை ரசிக்கிறோம்.
வாசனையை முகரும் போது
கண்களை மூடி மூச்சிழுக்கிறோம்.
மணியோசைகளை இருந்தவரை
மலர்வாசனை தெரியவில்லை.
ஓசையெனும் இரும்புக்கரம்
மலர்களின் குரல்வளையை நெருக்கியதால்
வாசனையை மூச்சுவிட முடியாமல் அவை திணறின-
உண்மைதான்!
செயற்கை வெளிச்சத்தில்
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம் தெரியாமல் போய்வருகின்றன.
ஒருவழியாக மணியோசை நின்று விட்டது.
இப்போது தான் கவனப்பிசகு இல்லாமல், சிந்தனை சிதறாமல்
மலர் வாசனையை நுகர முடியாது.
இது ஒரு பூரணமான மாலைப் பொழுதாக பரிமளிக்கிறது.
மலர்களின் மணத்தை நுகருவது
மணியை ஒலிப்பதிலும் அழகாக
இறைமைக்குச் செய்கிற மரியாதை
ஓடிவரும் தென்றலின் இழுப்பில் உட்காரும்
பூ வாசனையில் திளைத்து விழிகளை மூடி
தன்னை ஒவ்வொரு துளியாக இழுப்பதும்
இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் கரைத்துக் கொள்வதிலுமா
மணியோசை பெரிய வழிபாட்டுச் சின்னம்.
காத்திருப்போம்.................
.மணியோசைகள் எல்லாம் மறையட்டும்
மலர்களின் நறுமணம் மட்டும் மீதப்படும்.
நமது மனதுக்குள் இருக்கும் ஓசைகள் எல்லாம் அடங்கட்டும்.
நமக்குள் இருக்கும் தெய்வீக மணம் வெளியே கிளம்பும்.
அது பூரணமான மாலைப் பொழுதாய்ப் புறப்படும்.