For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நின்னுடைத் தோளனையர் - இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ? - எனை
எண்ணிடை மார்பகத் தார் - இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும் - உளம்
இசையவிட் டேஇதை மறந்திடடா! (96)
13. துரியோதனன் பதில்
தந்தை இஃது மொழிந்திட கேட்டே
தாரி சைத்த நெடுவரைத் தோளான்
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்:
வந்த காரியங் கேட்டிமற் றாங்குன்
வார்த்தை யின்றி அப் பாண்டவர் வரார்
இந்த வார்த்தை உரைத்து விடாயேன்
இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன் (97)
Comments
Story first published: Monday, March 2, 2009, 20:42 [IST]