பாரதி பக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூதஞு" ச்டூடிஞ்ண="ணூடிஞ்டணா">- கி.ராஜநாராயணன்
தொடர்ச்சி...
நேரத்துக்கு இவளுக்கு இம்புட்டு கஞ்சிய ஊத்தி சட்டியில வச்சிருவாக. அத அவதொடமாட்டா. அது ஈ மொய்ச்சிக்கிட்டே கிடக்கும்.
தரையப் பாத்த மானைக்கு அப்பிடியே குங்கிப் போயி ஒடுங்கி உக்காந்திருப்பா.
அந்த ஊருக்கு வந்த ஒரு சாமியாரு இந்தக் கதையக் கேட்டாரு. புருசங்கிட்ட பேசிஅவள விடுவிக்கனும்னு போனா... ஏண்டா சாமியாருப்பயலே, எம் பொண்டாட்டிபேர்ல ஒனக்கென்னடா கரிசன. ஒனக்கும் அவளுககும் தொடுப்பு உண்டுமா ன்னுகேட்டு விரட்டியடிச்சிட்டாம்.
சாமியாருக்கு மனசு கேக்கல. ஊரு ஒடுங்குன பிறகு நடூச்சாமத்துக்கு வந்தாரு. சாரமழை பொசு பொசுன்னு தூவிக்கிட்டிருக்கு. குளிரு தாங்க முடியாம சனங்க இழுத்துமூடிப் படுத்துட்டாங்க. இவ முளையில தலைய ஊனிக்கிட்டு எந்தல விதியேன்னுகுளிருக்கு நடுங்கிட்டிருக்கா.
தாயி தாயின்னு வந்து சாமியாரு ஆதரவாக் கூப்பிட்டாரு மெள்ள
தலையத் தூக்கிப் பாத்தா. அம்மா இந்த அரக்கங்கிட்ட இனி நீ இருக்கனுமா. ஒன்னெஎம் மக மாதிரி வச்சிக் காப்பாத்துதேம். வந்துருன்னு கூப்பிட்டார்.
நா எங்கயும் வரமாட்டேம். எனக்கு விதிச்சது இதுதாம்ன்னு அழுதா.
சரி: ஒன்ன நா விடுதல பண்ணுதேன் எங்ஙனயும் போயி பிழைச்சிக்கொன்னுகட்டுகளையெல்லாம் அவுத்து விட்டுட்டு சாமியாரு போயிட்டாரு.
சாமியாரு போனதும், இவ எந்திரிக்க முடியாம எந்திரிச்சி வாசப்படி நிலையிலயேஇருக்க சட்டத்துல கயித்த மாட்டி சுருக்கப் போட்டு கழுத்த கொடுத்து தொங்கிட்டா.
அதற்குப் பிறகு அந்த வீட்டுல யாராலயும் குடியிருக்க முடியல.காலையில வாசத்தெளிக்க வெளிய வந்த புதுப் பெண்டாட்டி பயந்து அலறி உசுர விட்டுட்டா.அவனுக்கு கோட்டி (கிறுக்கு) பிடிச்சி, ஊரூரா பிச்சை எடுத்து பேசிப் பேசிசெத்தான். அவம் வீடு அவசரத்துக்கு ஒதுங்கவும் மூட்டுத்துணிகள வீசவுமாக்கிட்க்காம்