For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே: - நீ
கனியிலே இனிப்பதென்ன? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்ப தென்னே? கண்ண பெருமானே!
கனியிலே இனிப்பதென்ன? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்ப தென்னே? கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்தென்னே? கண்ணே பெருமானே- நீ
கனவிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழப்பலென்னே?கண்ண பெருமானே- நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே! - நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே! - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே
வேறு
போற்றி! போற்றி! போற்றி ! போற்றி!
கண்ண பெருமானே! - நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]