For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 11, 2001
(தொடர்ச்சி)
ஸ்ரீதரன்யான் சிவகுா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்துவிட்டேன்:
நான் புதியன், நான் கடவுள், நலிவி லாதோன்
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்: பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். (34)
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். (35)
கேளப்பா! மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்:
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே:
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! (36)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]