பாரதி பக்கம்
மார்ச் 17, 2001
சுயசரிதை
ஆங்கிலப் பயிற்சி
நேரு மாறெனை எந்தை பணித்தனன்:
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும், எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மாண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை. (21)
தரியு யிர்ச்சிறு சேவகர், தாதர்கள்,
நாயெ னத்திரி யொற்றர். உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர், விற்றிடும்
பேடியர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்,
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமில்
அறபர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ? (22)
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலோர்:
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்:
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்:
துணியு மாயுரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். (23)