For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்ச் 31, 2001
சுயசரிதை
சினத்தின் கேடு
செத்திடுவா ரொப்பாவார்: சினங் கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவார். (8)
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்,
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா,
சாகா மலிருப்பதும் சதுரா லன்று:
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்:
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ: படைத்தோன் காப்பான்:
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே. (9)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]