எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு "தமிழ்மாமணி" விருது
மார்ச் 25, 2003
எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு "தமிழ்மாமணி" விருது
பாண்டிச்சேரி:
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனுக்குத் "தமிழ்மாமணி" விருது வழங்கப்படும் என்று பாண்டிச்சேரிஅரசு அறிவித்துள்ளது. இதேபோல் "கலைமாமணி" விருது பெறும் கலைஞர்களின் பட்டியலையும்அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கலை, இலக்கியத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும்"தமிழ்மாமணி" மற்றும் "கலைமாமணி" விருதுகளை பாண்டிச்சேரி அரசு வழங்கி வருகிறது.
பாண்டிச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை இந்த விருதுகளை வழங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு "தமிழ்மாமணி" விருதுக்காக பிரபஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு ரூ.15,000 பணமும், ஒரு பவுன் எடையுள்ள தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும்வழங்கப்படும்.
இதேபோல் "கலைமாமணி" விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மு. ராதாகிருஷ்ணன் என்ற சித்தன்(இயல்), வெ. மணிக்கண்ணன் (இசை), கோவி. கலிய பெருமாள் (நாடகம்), சாந்திபாபு (நாட்டியம்),எஸ். குலசேகரன் (ஓவியம்) மற்றும் கோனேரி பா. ராமசாமி (நாட்டுப்புறக் கலை) ஆகியோர்"கலைமாமணி" விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ரூ.5,000 பணமும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும்வழங்கப்படும்.