கர்நாடக இசை சாப்ட்வேர்!
சென்னை:வளரும் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்காக புதிய சாப்ட்வேர் ஒன்றைசென்னையைச் சேர்ந்த வாய்ஸ் ஸ்னாப் என்ற சாப்ட்வேர் நிறுவனம்வடிவமைத்துள்ளது.
வாய்ஸ் ஸ்னாப் நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேருக்கு வாய்ஸ் ஸ்னாப் விஎஸ்2என்று பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடக சங்கீதத்தைக் கற்று வரும் வளரும்கலைஞர்களுக்காக இந்த விசேஷ சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசையின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் எந்த அளவுக்கு தேர்ச்சிஅடைந்துள்ளோம் என்பதை சுயமாகவே அறிந்து கொள்ள இந்த சாப்ட்வேர் வளரும்கலைஞர்களுக்கு உதவுகிறது.
இதுகுறித்து வாய்ஸ் ஸ்னாப் நிறுவன தலைமை செயல் அதிகாரி கணேஷ் பத்மநாபன்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ள விரும்பும்அனைவருக்கும் இது ஒரு வரப் பிரசாதமாகும்.
சரளி வரிசை, ஜண்ட வரிசை, அலங்காரம், கீதம், ஸ்வரஜதி, வர்ணம், கீர்த்திகள்,ஜாவளிகள், ராக ஆலாபனை, நிரவளி ஆகியவற்றை இதன் மூலம் கற்றுக் கொள்ளவும்முடியும்.
இந்த வசதியைப் பெற ஒரு கம்ப்யூட்டர், இன்டர் நெட் இணைப்பு மற்றும் வாய்ஸ்ஸ்னாப் விஎஸ்2 சாப்ட்வேர் ஆகியவை தேவை.
தற்போது வாய்ஸ் ஸ்னாப் விஎஸ்2வின் இலவச பதிப்பு கிடைக்கிறது.
இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்தி தங்களது குரலை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.எந்த அளவுக்கு அந்தக் கலைஞர் தேறியிருக்கிறார் என்ற முடிவு அவருக்கு அனுப்பிவைக்கப்படும்.
இன்னும் தேர்ச்சி, திறமை பெற என்னென்ன பயிற்சி தேவை, ஆலோசனை,திருத்தங்கள் உள்ளிட்டவையும் அந்தக் கலைஞருக்கு தெரிவிக்கப்படும் என்றுகூறியுள்ளார் பத்மநாபன்.