அராஜக வழியில் பாமக - வெற்றித்திருமகன்
காலத்துக்கு தக்கபடி தனது கொள்கைகளையும், முகாம்களையும் மாற்றிக் கொள்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்எப்போதும் தயங்கியதில்லை. இவர் எப்போது என்ன சொல்கிறார் என்பதையும், எப்போது எந்தக் கூட்டணியில்இருக்கிறார் என்பதையும் தினசரிகளில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தமிழகம்அமைதியாக இருப்பதில் மட்டும் எப்போதும் விருப்பம் இல்லாதவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தவெளிப்படையான உண்மை.
இப்போது நடிகர் விஜயகாந்துக்கு எதிராக அவரும், அவரது கட்சியினரும் மேற்கொண்டு வரும்நடவடிக்கைகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. விஜயகாந்த் என்ன சொல்லிவிட்டார்? மக்களைச் சந்திக்காமல்சிலர் அமைச்சர் ஆகியுள்ளனர் என்றும், காவிரி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நீர்வளத் துறையைக் கேட்காமல் சுயலாபத்துக்காக வேறு துறைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர் என்று கூறினார். தமிழக மக்களின் மனதில் என்னஇருந்ததோ அதை அப்படியே தனது பேச்சில் பிரதிபலித்தார்.
ராமதாஸ் ஒரு உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால், திமுக தலைவர் கருணாநிதியைப் போல்,விஜயகாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்திருப்பார். ஆனால்ஜனநாயகத்துக்கும் பாமகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக விஜயகாந்த்ரசிகர்களுக்கு எதிராக தனது படையை ஏவிவிட்டுள்ளார்.