மீண்டும் ரத்தக் கண்ணீர்!
எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பில் சக்கை போடு போட்ட ரத்தக் கண்ணீர் நாடகம், 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சென்னையில்நடக்கவுள்ளது.
திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் உருவான நாடகம்தான் ரத்தக் கண்ணீர். 1946ம் ஆண்டு முதல் முறையாக அரங்கேறியது.எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பைப் பார்த்து பலரும் பிரமித்துப் பாராட்டிய நாடகம் இது.
இந்த நாடகத்தை பட்டிதொட்டியெங்கும் போட்டு கலக்கினார் ராதா. கடைசியாக 1979ம் ஆண்டு இதில் அவர் நடித்தார். அவருடைய மறைவுக்குப்பின்னர் 1980 முதல் 1999ம் ஆண்டு வரை ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி இந்த நாடகத்தை நடத்தி வந்தார். கிட்டத்தட்ட 10 ஆயிரம் முறைக்கு மேல் மேடையேறியுள்ளது ரத்தக் கண்ணீர் நாடகம். கடந்த 7 ஆண்டுகளாக இந்த நாடகம் அரங்கேறாமல்இருந்து வந்தது.
|