மறைந்தார் ஷிட்னி ஷெல்டன்!
லாஸ் ஏஞ்சலெஸ்:உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் தனது 89வது வயதில் லாஸ் ஏஞ்சலெஸ்நகரில் இன்று (ஜனவரி 31) மறைந்தார்.
உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தவர் ஷெல்டன். குறிப்பாக பெண்கள் கூட்டம் இவருக்கு பெரும் ரசிகர்கூட்டமாக இருந்தது.
ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ள ஷெல்டனின் நாவல்கள் படிக்க விறுவிறுப்பானவை. எழுதுவது மட்டுமல்லால்நாடகம், டிவி, சினிமாவிலும் கலக்கியவர் ஷெல்டன்.
இவரது பல நாவல்கள் திரைப்படமாகியுள்ளன. ஷெல்டனின் நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயமும், அடுத்த அத்தியாயம் குறித்த எதிர்பார்ப்பைத்தூண்டும் வகையில் இருக்கும்.
89 வயதாகும் ஷெல்டன் நிமோனியாவில் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரதுமறைவால் ஷெல்டனின் லட்சக்கணக்கான ரசிகைகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.