For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவைத்தில் தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த 'ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புச் சொற்பொழிவு' மற்றும் 'தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடந்தது.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 14-12-2007 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் இஷா தொழுகையைத் தொடர்ந்து குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள சங்கத்தின் மீடியா குழு உறுப்பினர் காயல்பட்டிணம் ஜனாப். முஹம்மது முஹைதீன் அவர்களின் இல்லத்தில் ' ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புச் சொற்பொழிவும், தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' யும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் அஷ்ஷைக் ஏ. ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத் தலைமையேற்க, இளவல் எஸ். அல் அமீன் அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப். எம். முனீர் அஹ்மத் அவர்கள் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி துவங்கியது.

நிகழ்ச்சித் தலைவர் 'ஹஜ்ஜுப் பெருநாள் , நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தியாக வாழ்க்கை , கஃபாவின் வரலாறு ' என்ற தலைப்பில் தலைமையுரையாற்றிய பின், சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹுர் (இலங்கை) ஹழ்ரத், 'இஸ்லாமிய பெண்களின் கடமைகள் மற்றும் நபித்தோழியர்களின் வாழ்வு' என்ற தலைப்பிலும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்கள் 'குழப்பவாதிகளின் தோற்றமும், அவர்களை எதிர் கொள்ளும் முறைகளும்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஹழ்ரத் அவர்கள்' இஸ்லாம் கற்றுத் தந்த இனிய குடும்ப வாழ்க்கை' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்ற, சங்கத்தின் இதழியல் குழு உறுப்பினர் காயல் ஏ. ஹாமித் அபூ மாஜின் அவர்கள் நன்றியுறையாற்ற, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் துஆ ஓத, இரவு உணவுடன் இரவு 10:30 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய, இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X