தீர்வு காண முடியும்: மலேசிய எழுத்தாளர்கள்
மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குழு தமிழகத்தில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.நேற்று இந்தக் குழுவினர் சென்னை வந்தனர்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் எழுத்தாளர் குழுவின் தலைவரும், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவருமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது எந்த நாட்டிலும் ஏற்படக் கூடியதுதான்.
பல்வேறு இனப் பிரிவுகள் உள்ள நாடுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுத்தான் செய்யும். இவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
மலேசியா முஸ்லீம் நாடாக இருந்தபோதிலும், பிற இனத்தவர்கள் அவர்களது பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் உரிமை உண்டு.
மலேசியத் தமிழர்கள் பாதுகாப்பாகவும், செளகரியமாகவும் உள்ளனர்.
எங்களது இலக்கிய சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. இது இலக்கிய பயணம் மட்டுமே. முதல்வரைச் சந்தித்து பயணத்திற்கு உதவியதற்காக நன்றி கூறத்தான் வந்தோம். அரசியல் பேச வரவில்லை. வேறு எந்தக் கோரிக்கையையும் அவரிடம் வைக்கவில்லை என்றார் ராஜேந்திரன்.