For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் சுயமரியாதை மாநாட்டு 80வது ஆண்டு

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு ராட்டினக் கிணறு பகுதியில் இந்த தினத்தில் தான் 1929ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்தது.

அந்த மாநாடு நடந்து 80 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அங்கு திராவிடர் கழகம் சார்பில் நினைவு வரலாற்று கல்வெட்டு திறப்பு விழாவும், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததற்கும், தமிழகம் முழுவதும் உள்ள 240 சமத்துவ புரங்களில் பெரியார் சிலைகளை நிறுவ ஆணையிட்டதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் இன்று மாலை நடக்கிறது.

இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். பெரியார் படிப்பகத்துக்கு அடிக்கல் நாட்டி, சுய மரியாதை மாநாட்டு நினைவு வரலாற்று கல்வெட்டை திறந்து வைக்கிறார் கருணாநிதி.

திராவிடர் கழகப் பொருளாளர் சாமிதுரை, பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் தமிழண்ணல் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் பேசுகின்றனர்.

படிப்பகம் அமைக்க நிலத்தை இலவசமாக வழங்கிய கோபாலசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினர் செங்கல்பட்டில் குவிந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X