For Daily Alerts
Just In
வந்தவாசி தமிழ்ச்சங்க பாவேந்தர் விழா
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் பாவேந்தர் விழா நடைபெற்றது.
வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் தலைமை வகித்தார். நா.தமிழடியான், த.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சா.இரா. மணி வரவேற்றார்.
நகராட்சி கவுன்சிலர் அ.மு. உசேன் கவியரங்கை துவக்கி வைத்தார். தமிழ்ச்சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமையில் மழையூர் தமிழரசன், கதிரொளி உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
பின்னர் நடைபெற்ற உரையரங்கை வியாபாரிகள் சங்க மாவட்ட கௌரவத் தலைவர் மா. வசந்தராஜ் துவக்கி வைத்தார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மா. உத்திராபதி சிறப்புரையாற்றினர்.
சங்க பொருளர் பழ. சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபாகரன் நன்றி கூறினார்.
Comments
Story first published: Friday, May 2, 2008, 11:41 [IST]