திருத்துறைப்பூண்டியில் சித்த மருத்துவக் கழக வெள்ளிவிழா மாநாடு
தஞ்சாவூர்: சித்த மருத்துவக்கழகத்தின் வெள்ளிவிழா மாநாடு திருத்துறைப்பூண்டியில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்மாநில சித்த மருத்துவக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் நடந்தது. மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சித்த மருத்துவக்கழகத்தின் வெள்ளிவிழா மாநாட்டை, வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடத்த முடிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்மாநில சித்த மருத்துவக்கழகத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்.
வர்மக் கலை:
பலநோய்களை வரவிடாமல் தடுக்கும் அற்புதமான சக்தி படைத்த வர்மக்கலை பயிற்சியை, வர்ம ஆசான்களைக் கொண்டு, மாநாட்டின் முதல் நாள் (9-ந் தேதி) முதற்கட்ட இலவச பயிற்சியை தொடங்கியும், படிப்படியாக எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும், மூலிகை கண்காட்சி, இலவச மூலிகை மருத்துவமுகாமை நடத்தி மக்களுக்கு சேவை செய்வது.
மாநில மாநாட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சித்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து வருவது, என முடிவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டுக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பாரதிதாசன், தேவூர் ஜி. மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளலார் சமூக நலத் தொண்டு இயக்கத்தின் மாநில தலைவர் மன்னர் சிவாஜிபாலன் வரவேற்றார்.