குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடக்கம்
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை வகிக்கிறார். எம்பி அப்பாதுரை, எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தென்காசி ஆர்டிஒ தயாளன் வரவேற்கிறார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசுகிறார். சுற்றுலா துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகிறார். சுற்றுசூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான் பேசுகிறார்.
எம்பிக்கள் தனுஷ்கோடி ஆதித்தன், ரவிசந்திரன், எம்எம்ஏக்கள் பூங்கோதை, மாலைராஜா, வேல்துரை, கருப்பசாமி, சதன் திருமலைகுமார், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
ஒரிசா மாநில கலைஞர்களின் ஒடிசி நடனம், சென்னை கபிலன் சகோதரிகள் சங்கீதா-கயல்விழி குழுவினரின் பரதநாட்டியம், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் ஆகியவை நடக்கின்றது. சுற்றுலா அலுவலர் செல்லப்பா நன்றி கூறுகிறார்.