மதுரை நாடார் கல்லூரியில் தமிழ் இணையத்தள கருத்தரங்கம்
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் நடந்தது.
நூலகத்துறையைச் சேர்ந்த கவிதாதேவி அனைவரையும் வரவேற்றார்.கல்லூரிப் பொருளாளர் மணிமாறன் தலைமையுரை நிகழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப் பேசினார்.நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் முகவுரை நிகழ்த்தினார்.
தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் பொருளில் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
இவர் உரையில் இணையத்தளம் வரையறை, இணையத்தள வகைகள், தமிழ் இணையத்தள வளர்ச்சி, மின்னிதழ்கள், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு குறிப்பாக கண்ணன், சுபா ஆற்றி வரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.
அதுபோல் சுவிசில் வாழும் கல்யாண சுந்தரத்தின் மதுரைத் திட்டம் பற்றியும் விளக்கினார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகள் செயல்பாடுகளை விளக்கினார். தமிழ் விக்கிபீடியாவின் பணிகளையும் விவரித்தார்.