For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் நாட்டில் காந்தியடிகள் சிலை

By Staff
Google Oneindia Tamil News

Tokyo
டெல்லி: தேசப்பிதா காந்தியடிகளின் முழு உருவ வெண்கலச் சிலை ஜப்பான் நாட்டின் டோக்கியோவுக்கு அருகில் விரைவில் நிறுவப்படுகிறது.

டோக்கியோவின் புறநகரான சுகினாமி எனும் நகரில் இந்தச் சிலையை நிறுவுகிறது ஜப்பான் அரசு.

இதற்கான சிலை சமீபத்தில்தான் டெல்லி மாநில அரசு சார்பாக வடிவமைக்கப்பட்டது. வெண்கலத்திலான இந்த முழு உருவச்சிலையை நேற்று டெல்லி முதல் ஷீலா தீக்ஷித் சுகினாமி நகர மேயர் கிரோஷி யமடாவிடம் நேற்று ஒப்படைத்தார்.

பின்னர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாத்மா ஒரு நிஜமான அவதார புருஷன். இன்றும் இந்த உலகுக்கு சக்திவாய்ந்த போராட்ட ஆயுதத்தைத் தந்தவர் காந்தியடிகள்.

ஜப்பானில் முதன்முறையாக நிறுவப்படவுள்ள காந்தியடிகளின் சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது, என்று கூறியுள்ளார் ஷீலா தீக்ஷித்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X