For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் பிரமாண்ட புத்தக கண்காட்சி - இன்று தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Book Exhibition
மதுரை: மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் இன்று பிரமாண்ட புத்தக கண்காட்சி தொடங்குகிறது. 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் புத்தக விற்பனை கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 7-ந் தேதி வரை நடைபெறும்.

150 அரங்குகள் ஒதுக்கப்பட்டு, 1 லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கான நூல்கள், கல்வி, தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ், ஆங்கில புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

புத்தக திருவிழாவில் தினமும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், குறும்படம், கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, மனப்பாடம், ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகள் மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி கூடத்தில் நடைபெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X