For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

Maha Deepam festival in Tiruvannamalai
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதை கண்டு தரிசித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2ம் தேதி திருக் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் நடந்தது. பெரிய கார்த்திகை எனப்படும் இன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத் திருவிழா நடந்தது.

இதையொட்டி அண்ணாமலையாருக்கு இன்று சிறப்பு பூஜை நடந்தது.

இன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைர கிரீடமும், தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டன.

பிரதோஷ நந்தி சிலை அருகே பஞ்ச முக தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஐந்து தீபங்களையும் ஒன்றிணைத்து பரணி தீபமாக ஏற்றப்பட்டது.

இன்று மாலை சரியாக 5.55 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிரு்நதும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டுத்து அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.

கார்த்திகை மகா தீபத் திருவிழாவை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X