For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பத்தூரில் கம்பன் கழகம் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அம்பத்தூரில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி, ராஜபாளையம், புதுச்சேரி, வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பன் கழகம் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கம்பன் கழகத்தின் கிளை அம்பத்தூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் கழகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் மூலம் மாதந்தோறும் கம்பன் பற்றிய சொற்பொழிவு நடைபெறும் என்று அதன் தலைவர் பழ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் நிறுவனர் மு.சுப.அருணாசலம், கௌரவத் தலைவர் மெலட்டூர் நாராயண பாரதி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X