2008ன் முக்கிய சம்பவங்கள்!
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி - நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
பெனாசிர் பூட்டோவின் படுகொலை நடந்த சில வாரங்களில் பிப்ரவரி 18ம் தேதி நடந்த இந்தத் தேர்தலில் முஷாரப் ஆதரவு கட்சி படு தோல்வி அடைந்தது.
கிலானி புதிய பிரதமரானார். இதையடுத்து முஷாரப் பதவி விலக வேண்டும் என நெருக்குதல்கள் அதிகரித்தன. அவரை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து வெளியேற்ற சர்தாரியும், ஷெரீப்பும் முடிவு செய்தனர்.
இந்த விஷயத்தில் ஷெரீப் அவசரம் காட்டினார். ஆனால் முஷாரப்புடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டினார் சர்தாரி.
இப்படியாக நடந்து வந்த கண்ணாமூச்சி ஆட்டம் செப்டம்பரில் முடிவுக்கு வந்தது. அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி போட்டியிட்டார். செப்டம்பர் 6ம் தேதி நடந்த தேர்தலில் சர்தாரி வெற்றி பெற்று அதிபரானார்.
இன்னொரு பாகிஸ்தான் அதிபராக சர்தாரி இருப்பாரா அல்லது இந்தியாவுடன் இணக்கமான நல்லுறவை ஏற்படுத்த உதவுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்