For Daily Alerts
Just In
2008ன் முக்கிய சம்பவங்கள்!
யாரும் எதிர்பாராத சந்திப்பு இது. மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்கு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்துப் பேசினார் ராஜீவின் மகள் பிரியங்கா காந்தி.
பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய சந்திப்பு இது.
வேலூர் மகளிர் சிறைக்கு வந்த பிரியங்கா காந்தி, நளினியை சந்தித்து ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தனது தனிப்பட்ட சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
பிரியங்கா, நளினி சந்திப்பு குறித்த தகவல் உடனடியாக வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இது ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளியுலகுக்குக் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
Story first published: Wednesday, December 31, 2008, 15:18 [IST]