நெல்லையில் உணவுத் திருவிழா - மக்கள் குஷி
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்தகிர் பள்ளிகள் சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட்டது.
இந்த விழாவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வு கட்டுபாட்டு அலுவலர் (பொறுப்பு) கண்ணன் துவக்கி வைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 30 வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்தனர்.
கருப்பட்டி மிட்டாய், கார, இனி்ப்பு கொழுக்கட்டை, தந்தூரி சிக்கன், அல்வா ஆகியவற்றை பலரும் விரும்பி சாப்பிட்டனர். இதற்காக பள்ளியில் 17 கடைகள் திறக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கடைகளிலும் வித்தியாசமான விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. விழா குறித்து பள்ளியின் தளாளர் புஷ்பலதா கூறுகையில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற அடிப்படையில் இந்த நடத்தப்படுகிறது.
7வது ஆண்டாக நேற்று ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இது அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர் நல்வாழ்வுக்காக வழங்கப்படுகிறது என்றார்.