தாஜ்மஹாலின் பொலிவை காப்பாற்ற 1 லட்சம் துளசி செடி வளர்ப்பு
ஆக்ரா: சுற்றுப்புற சூழல் சீர்க்கேட்டில் இருந்து தாஜ்மஹாலின் பொலிவை காப்பாற்ற அதை சுற்றிலும் சுமார் 1 லட்சம் துளசி செடிகள் வளர்க்கப்படும் என உபி வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்ராவை சுற்றியுள்ள உள்ள நிறுவனங்கள் வெளியிடும் அதிக புகைகள் காரணமாக தாஜ்மஹாலின் பொலிவு கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இப் பிரச்சினையில் இருந்து தாஜ்மஹாலை காக்க உபி மாநில வனத்துறை மற்றும் லக்னோவை சேர்ந்த ஒரு நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இவர்கள் தாஜ்மஹாலை சுற்றிலும் 1 லட்சம் துளசி செடியை வளர்க்க இருக்கிறார்கள். இது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தும் முக்கிய தாவரங்களில் துளசியும் ஒன்று.
அது அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிட்டு, வளிமண்டலத்தில் இருக்கும் மாசுக்களின் அளவை குறைக்கிறது.
இதன்மூலம் பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மாசுகலந்த புகை தாஜ்மஹாலை பாதிக்காது. தற்போது 20 ஆயிரம் துளசி செடிகளை வளர்க்க இருக்கிறோம். இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என்றார்.