நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் கரிசல் திருவிழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து பல்கலைக்கழக தகவல் தொடர்புத்துறை தலைவர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையி்ல்,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்புத்துறை மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக கரிசல் திருவிழா-2009 என்ற போட்டி 3வது முறையாக நடத்தப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தி.சபாபதி மோகன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 30 கல்லூரிகளைச் சேர்ந்த தகவல் தொடர்புத்துறை மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டோகிராபி, டாக்குமெண்டரி, குறும்படம், விளம்பரம் உள்பட 8 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போட்டி நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அதிக புள்ளிகள் பெற்று வரும் கல்லூரிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மனோ மீடியா கிளப் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.