For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கண்ணாடி, இடுப்புக் கண்ணாடி

By Sridhar L
Google Oneindia Tamil News

Gandhiji
லண்டன்: மகாத்மா காந்தியடிகளின் ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடி, செருப்புகள், இடுப்பில் தொங்க விட்டிருக்கும் கடிகாரம், தட்டு, கிண்ணம் ஆகியவை லண்டனில் ஏலத்திற்கு வருகின்றன.

மார்ச் 4 - 5 ஆகிய தேதிகளில் இந்த பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. அனைத்தும் சேர்ந்து 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் சேகரித்து ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

தனது கண்ணாடிகளை 1930ம் ஆண்டு ராணுவ கர்னல் திவான் நவாப் என்பவரிடம் கொடுத்துள்ளார் காந்தி. அப்போது, இவைதான் எனது இந்தியாவை சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற பார்வையை எனக்குக் கொடுத்தவை என்று அப்போது கூறினாராம் காந்தி.

அதேபோல தனது செருப்புகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவரிடம் 1931ம் ஆண்டு கொடுத்தார் காந்தி. லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த செருப்புகளை அவர் கொடுத்துள்ளார்.

அதேபோல 1910ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இடுப்பில் கட்டிக் கொள்ளும்படியான பாக்கெட் வாட்ச்சை, தனது உறவினரான அபா காந்தியிடம் வழங்கியிருந்தார் காந்தி. இந்தக் கடிகாரம் ஏலப் பொருட்களில் மிகவும் அதிக விலைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் ஆக்ஷனர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மிச்சல் ஹால்பெர்ன் இந்த ஏலத்தை லண்டனில் நடத்தவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X