For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேசுவரம் கம்பன் கழக ஆண்டுவிழா

By Sridhar L
Google Oneindia Tamil News

ராமேசுவரம்: ராமேஸ்வரத்தில் உள்ள கம்பன் கழக ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அங்குள்ள கோசுவாமி மண்டபத்தி்ல் இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது. புதுச்சேரி கம்பன் கழக துணைத் தலைவர் சிவக்கொழுந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கம்பன் கழகச் செயலர் முருகேசன் தலைமை உரையாற்றினார்.

ராமேசுவரம் கம்பன் கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் கோடூர் ரமணிசாஸ்திரி, புதுச்சேரி கம்பன் கழகப் பொருளாளர் வேல்சொக்கநாதன் வாழ்த்துரை வழங்கினர்.

கம்பனில் வள்ளுவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இலங்கை கம்பன் கழகப் பொறுப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.

ராமேசுவரம் கம்பன் கழக இணைச் செயலர் பழனிச்சாமி வரவேற்றார். கருத்தரங்கில் இலங்கை பிரசாந்தன், இள. ராமசாமி, ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் ராமேசுவரம் திமுக நகர் செயலர் ஜான்பாய், இலங்கை பிரசாந்தனுக்கு விருது வழங்கினார்.

கம்பன் வழிகாட்டுதலில் பெரிதும் பயனடைவது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்தார். ராமேசுவரம் கம்பன் கழகப் பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X